search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குறிஞ்சிப்பாடியில் தொடர் திருட்டு  வியாபாரிகள் அச்சம்
    X

    குறிஞ்சிப்பாடியில் தொடர் திருட்டு வியாபாரிகள் அச்சம்

    • துணிகள் மற்றும் ரொக்கம் 20 ஆயிரம் ரூபாய் திருடு போனதாக கூறப்படுகிறது.
    • திருட்டு சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர்:

    குறிஞ்சிப்பாடி சாவடி பஸ் நிறுத்தம் அருகே பல்வேறு வணிக நிறுவன ங்கள் உள்ளன. அதில் ஜவுளி கடைகள், ஹோட்டல்கள், செல்போன் சர்வீஸ் கடைகள் என மக்கள் அதிகம் பயன்படுத்தும் நிறுவனங்களும் உள்ளன.

    இந்த நிலையில் ஈகிள் டெக்ஸ் என்ற பெயரில் செயல்பட்டு வந்த ஜவுளி கடையில் இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட துணிகள் மற்றும் ரொக்கம் 20 ஆயிரம் ரூபாய் திருடு போனதாக கூறப்படுகிறது. அதேபோல அதன் அருகே உள்ள கணபதி செல்போன் சர்வீஸ் கடையில் பழுது நீக்கத்தி ற்காக வந்திருந்த விலை உயர்ந்த 3 செல்போன்களும், 500 ரூபாய் ரொக்கமும் திருடு போனது. இதே போல வேறு சில கடைகளின் பூட்டுகளும் உடைக்கப்பட்டு கிடந்தன. ஆனால் பொருட்கள் எதுவும் திருடப்படவில்லை. இது குறித்து சம்பந்தப்பட்ட நிறுவ னங்களின் உரிமையாளர்கள் குறிஞ்சிப்பாடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். போலீசார் இந்த திருட்டு சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் இது போன்ற சம்பவங்கள் நடந்தது வியாபாரிகள் மற்றும் பொது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×