search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    தருமபுரி மாவட்டத்தில் காய்ச்சல் முகாம்
    X

    தருமபுரி மாவட்டத்தில் காய்ச்சல் முகாம்

    • தொடர்ந்து தினமும் வட்டாரத்திற்கு மூன்று இடங்களில் இந்த சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.
    • தமிழகம் முழுவதும் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழ்நாடு முழுவதும் முதற்கட்டமாக ஆயிரம் இடங்களில் காய்ச்சல் மருத்துவ முகாமானது நடைபெற்று வருகிறது.

    தருமபுரி,

    இதில் அனைத்து மாவட்டங்களிலும், காய்ச்சல் அதிகமாக உள்ள இடங்களை கண்டறிந்து முதற்கட்டமாக முகாம் நடத்த மக்கள் நலாவாழ்வு துறை அறிவுறுத்தியுள்ளது.

    இதனை தொடர்ந்து தருமபுரி மாவட்டத்தில் உள்ள 8 வட்டாரங்களில் காய்ச்சல் பாதிப்பு அதிகமாக உள்ள இடங்களை கண்டறிந்து முதற்கட்டமாக காய்ச்சல் முகாம் நடைபெற்று வருகிறது. நேற்று மூன்று இடங்களில் இந்த காய்ச்சல் முகாம் நடைபெற்றது.

    இந்த முகாமுக்கு வருபவர்கள் பொது மக்களுக்கு காய்ச்சல் பாதிப்பு இருக்கிறதா என கண்டறியப்படுகிறது.

    முன்னதாக ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு கண்டறியப்பட்டு மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது.

    இதில் காய்ச்சல், சளி, இருமல் பாதிப்பு உள்ளவர்களுக்கு மட்டும் மருந்து, மாத்திரைகள் வழங்கப்படுகிறது.

    மேலும் தொடர்ந்து தினமும் வட்டாரத்திற்கு மூன்று இடங்களில் இந்த சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.

    இந்த முகாமில் மருத்துவர்கள், செவிலியர், கிராம செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள் உள்ளிட்ட மருத்துவ துறையினர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×