search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த நிதி நிறுவன உரிமையாளர் தற்கொலை
    X

    ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த நிதி நிறுவன உரிமையாளர் தற்கொலை

    • ஆன்லைன் ரம்மியில் சக்திவேல் மிகவும் ஈடுபாடு கொண்டு இருந்துள்ளார்.
    • கடையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    நெல்லை:

    தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள சேர்வைக்காரன்பட்டி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் காமராஜ். இவரது மகன் சக்திவேல் (வயது 31). டிப்ளமோ பட்டதாரி.

    இவருக்கு அருணா என்ற மனைவியும், 3 வயதில் ஆண் குழந்தையும் உள்ளனர். சக்திவேல் கடையத்தில் வாகனங்களுக்கு கடன் வழங்கும் நிறுவனத்தில் ஒரு பங்குதாரராக இருந்து வந்தார்.

    இந்நிலையில் கடந்த 21-ந் தேதி சக்திவேல் விஷத்தை குடித்து மயங்கி கிடந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தென்காசியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றிரவு சக்திவேல் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து கடையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். சமீப காலமாக ஆன்லைன் ரம்மியில் சக்திவேல் மிகவும் ஈடுபாடு கொண்டு இருந்துள்ளார்.

    ஒரு கட்டத்தில் அவர் அந்த விளையாட்டுக்கு அடிமையாகி ரூ. 6 லட்சம் வரை பணத்தை இழந்ததாக கூறப்படுகிறது.

    இதன் காரணமாக அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து இருக்கலாமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×