search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அதிக தூரம் செல்லும் வெடிகளை பயன்படுத்த வேண்டாம்- விழிப்புணர்வு ஏற்படுத்திய பெட்ரோலிய நிறுவனம்
    X

    அதிக தூரம் செல்லும் வெடிகளை பயன்படுத்த வேண்டாம்- விழிப்புணர்வு ஏற்படுத்திய பெட்ரோலிய நிறுவனம்

    • எளிதில் தீப்பற்ற கூடிய பெட்ரோல் நிறுவனங்கள் அருகில் இருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை
    • ஒன்றிய கவுன்சிலர் ரமேஷ் தலைமையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி துண்டு பிரசுரம் விநியோகித்தனர்.

    பொன்னேரி:

    மீஞ்சூர் அடுத்த கொண்டக்கரை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தொழிற்சாலைகள், பெட்ரோலிய நிறுவனங்கள், கெமிக்கல், கேஸ் நிரப்பும் ஆலை, எளிதில் தீப்பற்ற கூடிய நிறுவனங்கள் உள்ளிட்ட பல நிறுவனங்கள் கிராமங்களை சுற்றி காணப்படுகின்றன.

    தீபாவளியை முன்னிட்டு கிராமங்களில் பட்டாசு வெடித்து கொண்டாடுவது வழக்கம். எளிதில் தீப்பற்றக் கூடிய பெட்ரோலிய நிறுவனங்கள் அருகில் இருப்பதால் பேராபத்திலிருந்து தடுக்கும் பொருட்டு முன்னெச்சரிக்கையாக பெட்ரோலிய நிறுவனம் சார்பில் அப்பகுதி கிராம மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    அதிக தூரம் சென்று வெடிக்கக்கூடிய வெடிகள், ராக்கெட் பட்டாசு, வாணவெடிகள், அதிக புகை, நச்சு தரும் வெடிகள் உள்ளிட்ட வெடிகளை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டாம் எனவும், பட்டாசுகளை பாதுகாப்பாக வெடிக்க வேண்டும் எனவும் பொதுமக்களிடையே ஒன்றிய கவுன்சிலர் ரமேஷ் தலைமையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி துண்டு பிரசுரம் விநியோகித்தனர். இதில் சேர்மன் ரவி, ரிலையன்ஸ் டெர்மினல் மேனேஜர் திருச்சி விஸ்வநாதன் மற்றும் நாகராஜ், நரேஷ், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×