search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    கொடி நாள் நிதியாக ரூ. 1.32 கோடி வசூல்
    X

    கொடி நாள் நிதியாக ரூ. 1.32 கோடி வசூல்

    • ரூ.5.02 லட்சம் மதிப்பிலான கல்வி உதவித் தொகைகளை மாவட்ட வருவாய் அலுவலர் வழங்கினார்.
    • முன்னாள் படைவீரர்களுக்கு கேடயங்களை வழங்கப்பட்டது.

    தருமபுரி

    தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் படைவீரர் கொடி நாளையொட்டி மாவட்ட வருவாய் அலுவலர் பால்பிரின்ஸ்லி ராஜ்குமார் தலைமையில் கொடிநாள் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நம் தாய்நாட்டை காக்கும் வகையில் பணி, வெயில், மழை எதுவும் பாராமல் நமது தேசத்திற்காக பாதுகாக்கும் படைவீரர்கள் மற்றும் போர் வீரர்களின் மகத்தான சேவையினை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் டிசம்பர் 7-ஆம் நாள் படைவீரர் கொடிநாளாக அனுச ரிக்கப்படுகிறது. இந்த படைவீரர் கொடி நாளில் தேசத்திற்காக பாதுகாக்கும் வீரர்களை கௌரவிக்கும் விதமாக மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் இன்று முன்னாள் படைவீரர் மற்றும் சார்ந்தோர்களுக்காக தேநீர் உபசரிப்பு நிகழ்ச்சி நடைபெற்து.

    தருமபுரி மாவட்டத்தில் இந்த ஆண்டில் மாவட்ட நிர்வாகத்தின் முயற்சியால் இலக்கான ரூ.1.32 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது.

    முன்னதாக, தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 2024-ஆம் ஆண்டிற்கான கொடிநாள் தினத்தை முன்னிட்டு, மாவட்ட வருவாய் அலுவலர் கொடிநாள் நிதி அளித்து வசூலை தொடங்கி வைத்தார். மேலும், எதிர்வரும் ஆண்டுகளிலும் இலக்கினை விட கூடுதலாக கொடிநாள் நிதி வசூல் செய்து வழங்கிட அரசுத்துறை அலு வலர்கள் கேட்டுக்கொண்டார்கள்.

    இதனை தொடர்ந்து, முன்னாள் படைவீரர்கள் நலத்துறையின் சார்பில் 22 முன்னாள் படைவீரரது சிறார்களுக்கு ரூ.5.02 லட்சம் மதிப்பிலான கல்வி உதவித் தொகைகளை மாவட்ட வருவாய் அலுவலர் பால்பிரின்ஸ்லி ராஜ்குமார் வழங்கினார்.

    முன்னதாக, 1971- இந்தியா, பாகிஸ்தான் போரில் உயிர்நீத்த இந்திய படைவீரர்களின் தியாகத்தை போற்றும் வகையிலும், பங்குபெற்ற வீரர்களின் நினைவாகவும் மாவட்ட வருவாய் அலுவலர் பால்பிரின்ஸ்லி ராஜ்குமார் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தி, முன்னாள் படைவீரர்களுக்கு கேடயங்களை வழங்கி பேசினார். அப்போது அவர், தருமபுரி மாவட்ட நிர்வாகம் என்னென்றும் முன்னாள் படைவீரர் நலனில் உறுதுணையாக இருக்கும். மேலும், முன்னாள் படைவீரர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளை முன்னாள் படைவீரர் அலுவலகத்தினை அணுகி முழுமையாக பெற்று பயனடையலம் எனவும் தெரிவித்தார்.

    இந்நிகழ்வின்போது கூடுதல் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் இளங்கோ, கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் ராமதாஸ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் லோகநாதன், முன்னாள் படைவீரர் நலன் உதவி இயக்குநர் பிரேமா, மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×