search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    போலீசுக்கு மிரட்டல் விடுத்த பூ வியாபாரி கைது
    X

    போலீசுக்கு மிரட்டல் விடுத்த பூ வியாபாரி கைது

    • வாலிபர் போலீசாரை தகாத வார்த்தையால் திட்டி, கொலை மிரட் டல் விடுத்தார்.
    • கொலை மிரட்டல் விடுத்த பூ வியாபாரி நவீன் குமார் (24), என்பவரை கைது செய்தனர்.

    தேன்கனிக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை காவல் நிலைய முதல்நிலை காவலர் கணேசன் தலைமை யிலான போலீசார் தின்னூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டி ருந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். அந்த வாலிபர் போலீசாரை தகாத வார்த்தையால் திட்டி, கொலை மிரட் டல் விடுத்தார். மேலும் போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்துள்ளார். இது தொடர்பாக தேன்கனிக்கோட்டை போலீசில் காவலர் கணேசன் புகார ளித்தார்.

    இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலை மிரட்டல் விடுத்த பூ வியாபாரி நவீன் குமார் (24), என்பவரை கைது செய்தனர். விசாரனை செய்து வழக்குபதிவு செய்து ஒசூர் சிறைசாலையில் அடைத்தனர்

    Next Story
    ×