search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    இனிப்பு கடைகளில் உணவு பாதுகாப்புத் துறையினர் ஆய்வு
    X

    இனிப்பு கடைகளில் உணவு பாதுகாப்புத் துறையினர் ஆய்வு

    • பாலக்கோடு இனிப்பு கடைகளில் உணவு பாதுகாப்புத் துறையினர் ஆய்வு நடத்தினர்.
    • ரூ. 1000 வீதம் 2 கடைகளுக்கு உடனடி அபரா தமும் விதிக்க பட்டது.

    தருமபுரி மாவட்டம் முழுவதும் தீபாவளி பண்டிகை முன்னிட்டு இனிப்பு மற்றும் காரம் தயாரிப்பு இடங்கள், விற்பனை நிலையங்கள் மற்றும் பேக்கரிகளில் உணவு பாதுகாப்பு விதிமுறைகள்படி நடை முறை பின்பற்றப்படுகின்றனவா? அப்படி இல்லாத பட்சத்தில் உரிய நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக உணவு பாதுகாப்புத் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

    அதன் தொடர்ச்சியாக பாலக்கோடு, வெள்ளிச்சந்தை, மற்றும் மாரண்டஅள்ளி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள இனிப்பு, காரம் தயாரிப்பு கூடங்கள் மற்றும் விற்பனை நிலையங்களில் உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் ஆய்வு செய்தார். ஆய்வில் ஒரு சில தயாரிப்பு கூடங்கள் மற்றும் விற்பனை நிலையங்கள் இருந்து அதிக நிறமூட்டிகள் சேர்க்கப்பட்ட காரம் மற்றும் இனிப்பு அப்புறப்படுத்தப்பட்டது. மேலும் அச்சிடப்பட்ட செய்திதாள்களில் காட்சிப்படுத்தப்பட்டுருந்த எண்ணெய் பலகாரங்களை அப்புறப்படுத்தி , அச்சிடப்படாத பேப்பர்களில் காட்சிப்படுத்ததுதல், விநியோகித்தல் மற்றும் பொட்டலம் இடுதல் வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டது.

    பாலக்கோட்டில் ஒர் தயாரிப்பு நிலையத்தில் முந்திரி உள்ளிட்ட சில மூலப் பொருட்கள் உரிய லேபிள் நடைமுறை பின்பற்றாத அதாவது உரிய விபரங்கள் அச்சிடாத பாக்கெட்டுகளை வாங்குவது தவிர்க்க வலியுறுத்தி மேம்பாட்டு அறிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது. மேற்படி கடைக்காரர்களுக்கு நியமன அலுவலர் பரிந்துரை பேரில் தலா ரூ. 1000 வீதம் 2 கடைகளுக்கு உடனடி அபரா தமும் விதிக்க பட்டது.

    Next Story
    ×