search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிறந்த தேர்தல் நடைமுறை விருதுக்கான  விண்ணப்பங்கள் வரவேற்பு
    X

    சிறந்த தேர்தல் நடைமுறை விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு

    • அரசாங்கத்திற்கான தேசிய விருது -2022 வருகிற ஜனவரி மாதம் 25-ந்தேதி தேசிய வாக்காளர் தினத்தன்று பாராட்டு பத்திரம், பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படவுள்ளது.
    • தேர்தல் மேலாண்மை பகுதிகளில் சிறப்பாக செயல்படும் மாவட்ட தேர்தல் அலுவலர்கள் , காவல் கண்காணிப்பாளர்கள் ஆகியோருக்கு வழங்கப்படுகிறது.

    சேலம்:

    சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரி வித்துள்ளதாவது:-

    சிறந்த தேர்தல் நடைமுறை விருதுகள், வாக்காளர் கல்வி மற்றும் விழிப்புணர்வு குறித்த சிறந்த பிரச்சாரத்திற்கான தேசிய சி.எஸ்.ஓ. விருது, அரசாங்கத்திற்கான தேசிய விருது -2022 வருகிற ஜனவரி மாதம் 25-ந்தேதி தேசிய வாக்காளர் தினத்தன்று பாராட்டு பத்திரம், பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படவுள்ளது.

    சிறந்த தேர்தல் நடைமுறைக்கான -2022 விருதில் பொதுப்பிரிவு விருது, தேர்தல் மேலாண்மை பகுதிகளில் சிறப்பாக செயல்படும் மாவட்ட தேர்தல் அலுவலர்கள் , காவல் கண்காணிப்பாளர்கள் ஆகியோருக்கு வழங்கப்ப டுகிறது. சிறப்புப்பிரிவு விருது - தேர்தல் மேலாண்மை பகுதிகளில் சிறப்பாக செயல்படும் மாவட்ட தேர்தல் அலுவலர்கள், காவல் கண்காணிப்பாளர்கள் தவிர மற்ற அதிகாரிகளுக்கு வழங்கப்படுகிறது. சிறந்த மாநில விருது - தேர்தல் மேலாண்மை துறைகளில் சிறந்த ஒட்டுமொத்த திறனை வெளிப்படுத்தும் மாநிலத்திற்கு வழங்கப்படு கிறது.

    வாக்காளர் கல்வி மற்றும் விழிப்புணர்வு குறித்த சிறந்த பிரச்சாரத்திற்கான தேசிய சி.எஸ்.ஓ. விருது - 2022, பயனுள்ள மற்றும் புதுமையான திட்டங்கள் மூலம் தேர்தல் பங்களிப்பை ஊக்குவிப்பதற்கான நிறுவனங்கள், தனிநபர்க ளுக்கு வழங்கப்படுகிறது. அரசாங்கத்திற்கான தேசிய விருது - 2022 தேர்தல் பங்கேற்பை மேம்படுத்து வதற்கான துறை , நிறு வனம், பொதுத்துறை நிறு

    வனங்களுக்கு வழங்கப்படுகிறது.

    மேலும், விண்ணப்ப தாரர்கள் தங்களது கருத்து ருக்களை 23.11.2022-க்குள் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், முதல் தளம், அறை எண்.126, மாவட்ட சமூக நல அலுவல கத்தில் சமர்ப்பிக்க லாம். இவ்வாறு அவர், அதில் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×