search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    வால்பாறை வனப்பகுதியில் வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஆய்வு
    X

    வால்பாறை வனப்பகுதியில் வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஆய்வு

    • பழங்குடியின மக்களுக்கு தையல் மிஷின், பண உதவி ஆகியவைகள் 5 பேருக்கு வழங்கினார்.
    • வனத்துறை சார்பாக செயல்பட்டு வரும் தங்கும் விடுதியை ஆய்வு செய்தார்.

    வால்பாறை,

    கோவை மாவட்டம் வால்பாறை பகுதியை அமைச்சர் மதிவேந்தன் ஆய்வு செய்தார். நேற்று மாலை அட்டகட்டி வனத்துறை பயிற்சி மையத்தில் பழங்குடியின மக்களுக்கு தையல் மிஷின், பண உதவி ஆகியவைகள் 5 பேருக்கு வழங்கினார்.

    கீழ்புனாச்சி ஆதிவாசி பழங்குடியின மக்கள் வாழும் இடத்தில் வனப்பகுதிக்குள் புதர் போல் காணப்படும் உன்னி செடியிலிருந்து சேர், டேபிள், அழகு பொருட்கள் போன்ற கைவினைப் பொருட்கள் தயாரித்து வருகின்றனர்.

    அதை வனத்துறை அமைச்சர் பார்வையிட்டு அவர்களை ஊக்குவிக்கும் வண்ணம் பணம் மற்றும் பொருள் உதவி வழங்கினார். ஆதிவாசி பழங்குடியினர்களுக்கு தண்ணீர் வசதி, பொருள்கள் தயாரிக்கும் இடத்திற்கு செட், உன்னி செடிகளை கொண்டு வருவதற்கு வாகன வசதி ஆகியவைகளை வனத்துறை அமைச்சரிடம் ஆதிவாசி பழங்குடியின மக்கள் கோரிக்கை வைத்தனர். அதை முதல்-அமைச்சர் அறிவுறுத்தலின் பேரில் கண்டிப்பாக செய்து தருவதாக உறுதி அளித்தார்.

    அதன் பின்பு சில தினங்களுக்கு முன்பு டாப்ஸ்லிப் மானாம்பள்ளி வனப்பகுதிக்குள் இரவில் அபூர்வமாக காணப்பட்ட மின்மினி பூச்சி காணொளியை பார்வையிட்டு அதை புகைப்படம் எடுத்த ஸ்ரீராம், ராமச்சந்திரன் ஆகியோர்களை வாழ்த்தினார். மேலும் வனத்துறை சார்பாக செயல்பட்டு வரும் தங்கும் விடுதியை ஆய்வு செய்தார்.

    ஆதிவாசி பழங்குடியின மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் தமிழக அரசு செய்து தருவதாக கூறினார்.

    Next Story
    ×