என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
கோவையில் பெண் ஐ.டி.ஊழியரிடம் ரூ.5.60 லட்சம் மோசடி
- மர்ம நபர் ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக வருமானம் கிடைக்கும் என தெரிவித்தார்.
- கோவை மாநகர சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புவனேஸ்வரி புகார் அளித்தார்.
கோவை,
கோவை கணபதி வரதராஜலு நகரை சேர்ந்தவர் புவனேஸ்வரி(26).ஐ.டி.ஊழியர். இவர் ஆன்லைனில் பகுதி நேர வேலை தேடி வந்தார்.
அப்போது இவரது வாட்ஸ் ஆப் எண்ணுக்கு மெசேஜ் வந்தது. அதன் மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர் தான் பெரிய நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றுவதாகவும், யூடியூப் வீடியோவில் தங்களது நிறுவனம் பற்றி லைக் மற்றும் ஷேர் செய்தால் கமிஷன் கிடைக்கும் எனவும் தெரிவித்தார்.
மேலும் ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக வருமானம் கிடைக்கும் என தெரிவித்தார். இதனை நம்பி புவனேஸ்வரி அந்த நபர் தெரிவித்த வங்கி கணக்குகளில் வெவ்வேறு கட்டங்களாக ரூ.5.60 லட்சம் அனுப்பினார். ஆனால் அதன் பின்னர் புவனேஸ்வரிக்கு அந்த நபர் கூறியபடி கமிஷன் தொகை மற்றும் வருமானம் கிடைக்கவில்லை.
ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு என கூறி மர்ம நபர் புவனேஸ்வரியிடம் ரூ.5.60 லட்சத்தை மோசடி செய்தது தெரியவந்தது. இதுகுறித்து அவர் கோவை மாநகர சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்