search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    மத்திய அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்பு-நீலகிரி கலெக்டர் அம்ரித் தகவல்
    X

    மத்திய அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்பு-நீலகிரி கலெக்டர் அம்ரித் தகவல்

    • தேர்வு 2023 தொடர்பான அறிவிப்பினை 3.4.2023 அன்று வெளியிட்டுள்ளது.
    • பணியாளர் தேர்வாணையத்தின் இணைய தளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மத்திய பணியாளர்கள் தேர்வாணையம் ஒருங்கிணைந்த பட்டதாரி நிலையிலான தேர்வு 2023 தொடர்பான அறிவிப்பினை 3.4.2023 அன்று வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகள், நிறுவனங்கள் மற்றும் அரசியலமைப்பு சார்ந்த அமைப்புகள், சட்ட பூர்வ அமைப்புகள், தீர்ப்பாயங்கள் போன்றவற்றில் குரூப் "B" மற்றும் குரூப் "C" நிலையில் 7,500-க்கும் மேற்பட்ட பணிக்காலியிடங்களை அறிவித்துள்ளது. இத்தேர்வில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம்.

    பணியிடங்களின் விவரம், வயது வரம்பு, தேவையான கல்வித்தகுதி, செலுத்த வேண்டிய கட்டணம், தேர்வு திட்டம், விண்ணப்பிக்கும் முறை போன்ற விவரங்கள் ஆள்சேர்ப்பு அறிவிப்பில் விரிவாக வழங்கப்பட்டுள்ளது.

    இப்பணியிடங்களுக்கு www.ssc.nic.in என்ற பணியாளர் தேர்வா ணையத்தின் இணைய தளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம். கணினி அடிப்படையிலான இத்தேர்வுகளுக்கு உரிய கட்டணத்துடன் இணைய வழியாக விண்ணப்பிக்க கடைசி நாள்: 3. 5.2023 மற்றும் ஆன்லைன் மூலம் கட்டணம் செலுத்து வதற்கான கடைசி நாள் 4. 5.2023 ஆகும்.

    தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையங்களில் செயல்படும் தன்னார்வப் பயிலும் வட்டங்களில் பணியாளர் தேர்வாணைய போட்டித் தேர்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நேரடியாக நடத்தப்படப்படவுள்ளன. இத்தேர்விற்கான பாடத்திட்டங்கள் மற்றும் பாடக்குறிப்புகள் தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் மெய்நிகர் கற்றல் இணை யதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.மேலும், இந்த இணையத ளத்தில் 'TN Career Services Employment' மற்றும் அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியின் 'AIM TN' என்ற You Tube Channel-களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள இத்தே ர்விற்கான காணொலியை கண்டு பயன்பெறுமாறும், நீலகிரி மாவட்டத்தில் இத்தேர்விற்கு வி ண்ணப்பி த்த மற்றும் விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை தொடர்பு கொண்டு இப்பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டு பயன்பெறுமாறும் கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    Next Story
    ×