என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
இலவச மருத்துவ முகாம்
- குழந்தைகள், மாணவர்கள் பயன்பெறும் வகையில் நடைபெற்றது.
- மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி தொடக்கப்பள்ளி வளாகத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மற்றும் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல வாரியம் சார்பில் மாற்றுத்திற னாளிகளுக்கான இலவச மருத்துவ முகாம் 0 வயது முதல் 18 வயது வரையுள்ள குழந்தைகள், மாணவர்கள் பயன்பெறும் வகையில் நடைபெற்றது.
முகாமிற்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி தலைமை தாங்கினார். ஒசூர் மாவட்ட கல்வி அலுவலர் (பொறுப்பு) கோபாலப்பா முன்னிலை வகித்தார். வட்டார வள மைய பொறுப்பு மேற்பார்வையாளர் முகாமை வழி நடத்தினார்.
முகாமில் 83 பேர் கலந்து கொண்டனர். அவர்களை மருத்துவர்கள் உடனுக்குடன் பரிசோதனை செய்து தகுதியுள்ள 38 மாணவர்களுக்கு மாற்றுத் திறனாளி அடையாள அட்டை வழங்க பரிந்துரைத்தனர்.
அட்டை புதுப்பித்தல் 12 மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. மேலும் சக்கர நாற்காலி 2 பேருக்கும், காதொலி கருவி 4 பேருக்கும் வழங்கப்பட்டது.
விழாவில் கலந்து கொண்ட மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிறப்பாசிரியர்கள் செய்திருந்தனர். ஒருங்கிணைப்பாளர் வித்யாலட்சுமி கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்