என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
பொள்ளாச்சி அருகே சிறுமி திடீர் தற்கொலை
- வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- அபிநயாவின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது
கோவை,
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள பழனி கவுண்டன்புதூரை சேர்ந்தவர் தனபால்.
இவரது மகள் அபிநயா (வயது 17). இவர் பள்ளியில் படிக்கும் போது அதே பகுதியை சேர்ந்த காளிதாஸ் (18) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் 2 பேரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர்.
இந்த காதல் விவகாரம் அபிநயாவின் பெற்றோருக்கு தெரிய வரவே அவர்கள் தங்களது மகளை கண்டித்தனர்.
இதனால் அபிநயா காளிதாசுடன் பேசுவதையும், பழகுவதையும் தவிர்த்தார். ஆனால் காளிதாஸ் செல்போன் மூலமாக அழைத்து தொந்தரவு கொடுத்து வந்தார்.
கடந்த 3-ந் தேதி அபிநயாவின் வீட்டிற்கு சென்ற காளிதாஸ் ஏன் என்னுடன் பேசவில்லை என கேட்டார். அபிநயா சத்தம் போடவே அக்கம் பக்கத்தினர் வந்தனர். ஆனால் அதற்குள்ளாகவே அவர் அங்கு இருந்து சென்றார்.
இது குறித்து அபிநயா காளிதாஸ் மீது நடவடிக்கை எடுக்கும்படி பொள்ளாச்சி தாலுகா போலீசில் புகார் அளித்தார். போலீசார் அவரை அழைத்து எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
வீட்டிற்கு சென்ற அபிநயா திடீரென வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அவரது பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர் இது குறித்து பொள்ளாச்சி தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் தற்கொலை செய்து கொண்ட அபிநயாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக் அனுப்பி வைத்தனர்.
இது குறித்து பொள்ளாச்சி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்