search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கூடலூர் அருகே காட்டு யானை தாக்கி பெண் படுகாயம்
    X

    கூடலூர் அருகே காட்டு யானை தாக்கி பெண் படுகாயம்

    • பலத்த காயமடைந்த விஜய நிர்மலாவை கூடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்துள்ளனர்.
    • போலீசார் மற்றும் வனத்துறையினர் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்ட வனப்பகுதியில் யானை, காட்டெருமை, காட்டுப் பன்றி, முயல், கடமான் உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இவை அடிக்கடி உணவு மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்பு, விவசாய நிலங்களில் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன.

    கூடலூர் அருகே குந்தலாடி பகுதியை சேர்ந்தவர் விஜய நிர்மலா (வயது 51). இந்நிலையில் அவர் தனது சொந்த வேலை காரணமாக வீட்டில் இருந்து வெளியே சென்றார். பின்னர் கூடலூர்-குந்தலாடி வழியாக அவரது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

    சிறிது தூரம் சென்ற நிலையில், அப்பகுதிக்கு திடீரென காட்டு யானை ஒன்று வந்தது. இதை சற்றும் எதிர்பாராத அவர் அங்கிருந்து தப்பிக்க முயற்சி செய்தார். அப்போது அந்த காட்டுயானை அவரை திடீரென தாக்கியது. இதில் கீழே விழுந்த அவர் படுகாயம் அடைந்தார்.

    இதையடுத்து பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கூடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விசாரணை காயமடைந்த அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இதுகுறித்து கூடலூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் மற்றும் வனத்துறையினர் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×