search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போச்சம்பள்ளியில் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனை
    X

    போச்சம்பள்ளியில் வாரசந்தையில் ஆடுகளை வாங்கு வந்த வியாபாரிகளை படத்தில் காணலாம்.

    போச்சம்பள்ளியில் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனை

    • கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வாரச்சந்தை ஞாயிற்றுகிழமை தோறும் கூடுவது வழக்கம்.
    • வெள்ளாடு மற்றும் செம்மறி ஆட்டுக் கிடாய்கள் வரத்து அதிகமாக இருந்தது.

    மத்தூர்,

    பக்ரீத் பண்டிகையொட்டி போச்சம்பள்ளி வாரசந்தையில் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனை ஜோராக நடைபெற்றது. அந்த ஆடுகளை வாங்குவதற்காக போச்சம்பள்ளி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும், வெளியூர்களில் இருந்தும் வியாபாரிகள் குவிந்ததால் வாரசந்தை களை கட்டியது.

    வாரசந்தை

    கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வாரச்சந்தை ஞாயிற்றுகிழமை தோறும் கூடுவது வழக்கம். இச்சந்தையில் குண்டூசி முதல் தங்கம் வரை அனைத்தும் விற்கப்படுவதால், சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த விவசாயிகள், பொது மக்கள் வாரச்சந்தைக்கு வந்து ஒரு வாரத்திற்கு தேவையன பொருட்களை வாங்கி செல்வது வழக்கம்.

    இந்நிலையில் வருகிற 29-ந் தேதி அன்று பக்ரீத் பண்டிகையையொட்டி திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்திருந்த வியாபாரிகள் ஆர்வத்துடன் ஆடுகளை வாங்கி சென்றனர். இதன் காரணமாக ரூ. 1 கோடி வரை ஆடுகள் வியாபாரம் நடந்ததால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கிராமங்களில் பண்டிகைகளை எதிர்பார்த்து விவசாயிகள் ஆடுகளை வளர்த்து வருகின்றனர். பண்டிகை காலங்களில் விற்பனை செய்யும்போது சராசரி விலையை விட சற்று கூடுதல் விலை விற்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி கொண்டனர்.

    வெள்ளாடு மற்றும் செம்மறி ஆட்டுக் கிடாய்கள் வரத்து அதிகமாக இருந்தது. பொட்டு, மயிலை, நாடு, செம்மறி என ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிடாய்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. 15 கிலோ எடை கொண்ட ஆடுகள், ரூ.8 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை விற்பனையாகின. சுமார் ரூ.1 கோடி வரை ஆடுகள் விற்பனை நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×