search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில்  தங்க நகை தொழிலாளி தற்கொலை
    X

    கோவையில் தங்க நகை தொழிலாளி தற்கொலை

    • ரமேஷ் வீட்டில் உள்ள அறையில் தூக்கு போட்டு தொங்கினார்.
    • போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை

    கோவை பி.கே. புதூர் அருகே உள்ள ஐஸ்வர்யா கார்டனை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 39). தங்க நகை தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி உள்ளார்.

    இந்தநிலையில் ரமேசுக்கு இளம்பெண் ஒருவருடன் கள்ளத்தொடர்பு இருந்து வந்தாக கூறப்படுகிறது. இந்த கள்ளக்காதல் விவகாரம் அவரது மனைவிக்கு தெரிய வரவே கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த 25-ந் தேதி கணவன்-மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் மனவேதனை அடைந்த அவரது மனைவி கணவரிடம் கோபித்துக்கொண்டு வடவள்ளியில் உள்ள தனது தோழி வீட்டிற்கு சென்றார்.

    மனைவி பிரிந்து சென்றதால் மனவேதனை அடைந்த ரமேஷ் வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து குனியமுத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் தற்கொலை செய்து கொண்ட ரமேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து குனியமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை புலியகுளம் முத்து நாயகம் வீதியை சேர்ந்தவர் கணேசன் (41). இவர் அந்த பகுதியில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று குடிபோதையில் இருந்த அவர் வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ராமநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    போத்தனூரை சேர்ந்தவர் பிரவீன்குமார் (37). காந்திபுரத்தில் உள்ள டிராவல்ஸ் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வந்தார்.

    இவர் குடித்து விட்டதால் அவருக்கு அவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதல் மனவேதனை அடைந்த ரமேஷ் வீட்டில் உள்ள அறையில் தூக்கு போட்டு தொங்கினார். இதனை பார்த்த வீட்டில் இருந்தவர்கள் உடனடியாக ரமேஷை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×