search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்-ரூபி  மனோகரன் எம்.எல்.ஏ. அணிவித்தார்
    X

    பிறந்த குழந்தைக்கு ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. தங்க மோதிரம் அணிவித்த காட்சி.

    அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்-ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. அணிவித்தார்

    • ரூபி ஆர்.மனோகரன் எம்.எல்.ஏ. தலைமையில் ராகுல் காந்தி பிறந்த நாள் விழா நிகழ்ச்சி நடை பெற்றது.
    • குழந்தைகளின் தாய்க்கு பழத்தட்டுடன் புடவையும் பரிசாக வழங்கப்பட்டது.

    நெல்லை:

    நாங்குநேரி ஓசன்னா அன்பு இல்லம், மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு மையத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொருளாளர் ரூபி ஆர்.மனோகரன் எம்.எல்.ஏ. தலைமையில் நேற்று ராகுல் காந்தி பிறந்த நாள் விழா நிகழ்ச்சி நடை பெற்றது.

    தொடர்ந்து, மறுவாழ்வு மையத்தில் இருக்கும் அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது. ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. அனைவருக்கும் உணவு பரிமாறினார். அதைப்பார்த்ததும் மாற்றுத்திறனாளிகள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தார்கள்.

    அதனைத்தொடர்ந்து நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ரெட்டியார்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் நாங்குநேரி அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. தங்க மோதிரம் அணிவித்தார். குழந்தைகளின் தாய்க்கு பழத்தட்டுடன் புடவையும் பரிசாக வழங்கினார்.

    மேலும் அதே மருத்துவ மனைகளில் அதற்கு முன் தேதிகளில் பிறந்த குழந்தை களுக்கும் பரிசு வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள், வட்டார தலைவர்கள், கிராம கமிட்டி தலைவர்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×