என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கிருஷ்ணகிரியில் அரசு ஊழியர் சங்கத்தினர் பேரணி
- வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும்.
- 41 மாத கால பணிநீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி பழையபேட்டை காந்திசிலை அருகில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில், மாவட்ட அளவிலான அரசு ஊழியர்களின் வாழ்வாதார கோரிக்கை பேரணி நேற்று மாலை நடந்தது. இதற்கு மாவட்டத் தலைவர் சந்திரன் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் பாரி ஊர்வலத்தை தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.
இந்த பேரணி காந்திசிலை அருகே புறப்பட்டு டி.பி., சாலை வழியாக புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணாசிலை எதிரில் நிறைவடைந்தது.
இதில், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்துசெய்து, அனைவருக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அகவிலைப்படி நிலுவை, சரண்விடுப்பு வழங்க வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, எம்.ஆர்.பி., செவிலியர்கள், எம்.டி.எம்., சுகாதார ஆய்வாளர்கள், எம்.எல்.எச்.பி., ஊழியர்கள், ஊர்புற நூலகர்கள், கணினி இயக்குனர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். சாலைப்பணியாளர்களின் 41 மாத கால பணிநீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும். என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்