search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிருஷ்ணகிரியில் அரசு ஊழியர் சங்கத்தினர் பேரணி
    X

    கிருஷ்ணகிரியில் அரசு ஊழியர் சங்கத்தினர் பேரணி

    • வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும்.
    • 41 மாத கால பணிநீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி பழையபேட்டை காந்திசிலை அருகில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில், மாவட்ட அளவிலான அரசு ஊழியர்களின் வாழ்வாதார கோரிக்கை பேரணி நேற்று மாலை நடந்தது. இதற்கு மாவட்டத் தலைவர் சந்திரன் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் பாரி ஊர்வலத்தை தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.

    இந்த பேரணி காந்திசிலை அருகே புறப்பட்டு டி.பி., சாலை வழியாக புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணாசிலை எதிரில் நிறைவடைந்தது.

    இதில், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்துசெய்து, அனைவருக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அகவிலைப்படி நிலுவை, சரண்விடுப்பு வழங்க வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, எம்.ஆர்.பி., செவிலியர்கள், எம்.டி.எம்., சுகாதார ஆய்வாளர்கள், எம்.எல்.எச்.பி., ஊழியர்கள், ஊர்புற நூலகர்கள், கணினி இயக்குனர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். சாலைப்பணியாளர்களின் 41 மாத கால பணிநீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும். என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.

    Next Story
    ×