search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஜேடர்பாளையம் அருகே பட்டதாரி பெண் கொலை சி.பி.சி.ஐ.டி போலீஸ் விசாரணை தொடங்கியது
    X

    சி.பி.சி.ஐ.டி இன்ஸ்பெக்டர் பிரபா, கொலை சம்பவத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தை சேர்ந்த பெண்களிடம் விசாரணை நடத்திய போது எடுத்த படம்.

    ஜேடர்பாளையம் அருகே பட்டதாரி பெண் கொலை சி.பி.சி.ஐ.டி போலீஸ் விசாரணை தொடங்கியது

    • ஆடு மேய்த்து கொண்டிருந்த பட்டதாரி இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார்.
    • இந்த நிலையில் தமிழக அரசு, கடந்த சில தினங்க ளுக்கு முன்பு பட்டதாரி இளம்பெண் கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றம் செய்து உத்தர விட்டது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ஜேடர்பாளையம் அருகே உள்ள கரப்பாளையம் பகுதியில் கடந்த மார்ச் மாதம் 11-ம் தேதி மாலை நேரத்தில் அப்பகுதியில் சீம கருவேல மரங்கள் நிறைந்த பகுதியில் ஆடு மேய்த்து கொண்டிருந்த பட்டதாரி இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக வெல்லம் தயாரிக்கும் ஆலை கொட்டைகையில் பணி புரிந்து வந்த 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    தொடர் வன்முறை

    இந்த நிலையில் வட மாநில தொழிலாளர்கள் பணிபுரியும் ஆலை கொட்ட கைகள், டிராக்டர்கள், குடிசைகள், பள்ளி பேருந்து போன்றவற்றிற்கு தீ வைப்பு சம்பவங்கள், ஏரி தண்ணீ ரில் விஷம் கலந்து மீன்கள் செத்தது என அடுக்கடுக்கான வன்முறை சம்பவங்கள் நடைபெற்றது. கடந்த 13-ம் தேதி நள்ளிரவு வி.புதுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த எம்ஜிஆர் என்கிற முத்துசாமி என்பவருக்கு சொந்தமான வெல்லம் தயாரிக்கும் ஆலை கொட்ட கையில் பணிபுரியும் வட மாநில தொழிலாளர்கள் அறைக்குள் மர்ம நபர்கள் புகுந்து வட மாநில தொழி லாளர்கள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததில் 4 பேர் படுகாயம் அடைந்தனர். இதில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ராஜேஷ் கென்ட் (19) என்பவர் உயிரிழந்தார்.

    கடந்த 18- ந் தேதி இரவு ஜேடர்பாளையம் சரளைமேடு பகுதியில் உள்ள முருகேசன் என்ப வரது வாழைத்தோட்டத்தில் புகுந்த மர்ம நபர்கள் 600-க்கும் மேற்பட்ட வாழைகளை வெட்டி சாய்த்தனர்.

    இதையடுத்து இப்பகுதி களில் அசம்பாவிதங்கள் நிகழ்வதை தடுக்கும் பொருட்டு மேற்கு மண்டல ஐ.ஜி சுதாகர் தலைமையில் 1000-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு இரவு பகலாக பாதுகாப்பு பணியிலும் ரோந்து பணியி லும் ஈடுபட்டு வருகின்றனர்.

    சி.பி.சி.ஐ.டி விசாரணை தொடங்கியது

    இந்த நிலையில் தமிழக அரசு, கடந்த சில தினங்க ளுக்கு முன்பு பட்டதாரி இளம்பெண் கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றம் செய்து உத்தர விட்டது. இதையடுத்து நாமக்கல் சி.பி.சி.ஐ.டி போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபா, விசாரணை அதி காரியாக நியமிக்கப்பட்டார். அதனை தொடர்ந்து ஜேடர்பாளையம் போலீசார், கொலை வழக்கு தொடர்பான ஆவணங்களை சி.பி.சி.ஐ.டி இன்ஸ்பெக்டர் பிரபாவிடம் ஒப்படைத்தனர்.

    இதையடுத்து கரப்பாளை யத்தில் உள்ள அந்த பெண்ணின் வீட்டிற்கு நேற்று சென்ற சி.பி.சி.ஐ.டி இன்ஸ்பெக்டர் பிரபா மற்றும் போலீசார், அவரது கணவர், அவரது குடும்பத்தி னர் மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்தி வாக்கு மூலங்களை பதிவு செய்தனர்.

    கொலை நடந்த இடத்தை யும், அப்பகுதியில் உள்ள பொது மக்களிடமும் தீவிர விசாரணை நடத்த உள்ள னர். சி.பி.சி.ஐ.டி போலீ சாரின் முழு விசா ரணை நடந்த பிறகே கொலை சம்பந்தமான உண்மை தெரியவரும் எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×