search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புனித ஜோசப் கல்வியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா
    X

    புனித ஜோசப் கல்வியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

    • நிகழ்ச்சியில் பேராசிரியர் வில்லியம் தர்மராஜா கலந்து கொண்டு பேசினார்.
    • விழாவில் மாணவ-மாணவிகள் 194 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது.

    தென்காசி:

    கடையம் அருகே உள்ள வெய்க்காலிப்பட்டி புனித ஜோசப் கல்வியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் கல்வியியல் துறை தலைவரும், கல்லூரி வளர்ச்சி கழக இயக்குநருமான பேராசிரியர் வில்லியம் தர்மராஜா தலைமை விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.

    தொடர்ந்து கல்லூரியில் (2018-2020, 2019 -2021, 2020-2022) -ம் கல்வியாண்டில் பயின்ற மாணவ-மாணவிகள் 194 பேருக்கு பட்டங்களை வழங்கினார். கல்லூரித் தலைவரும், பாளையங்கோட்டை மறைமாவட்ட ஆயருமான எஸ். அந்தோணிசாமி விழாவிற்கு முன்னிலை வகித்து ஆசியுரை வழங்கினார். கல்லூரி செயலர் சகாயஜான் பட்டமளிப்பு விழாவினை தொடங்கி வைத்தார். கல்லூரி முதல்வர் மேரி ரபேலின் கிளாரட் வரவேற்புரை ஆற்றி ஆண்டறிக்கை யை வாசித்தார். விழா ஏற்பாடுகளை பேராசிரியர்கள் செய்திருந்தனர்.

    Next Story
    ×