என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
கோவையில் கஞ்சா விற்ற மூதாட்டி கைது
- போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முரளி தலைமையில் போலீசார் அங்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து சரஸ்வதியை கைது செய்து அவரிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
கோவை:
கோவை பெரியநாயக்கன் பாளையம் போலீசாருக்கு சாமநாயக்கன் பாளையம் மைதானத்தில் கஞ்சா விற்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முரளி தலைமையில் போலீசார் அங்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மைதானத்தில் ஒரு மூதாட்டி சந்தேகத்திற்கிடமாக அங்கும் இங்கும் சுற்றித் திரிந்து கொண்டிருந்தார்.
இதனை பார்த்த போலீசார் அந்த மூதாட்டியை பிடித்து சோதனை செய்தனர். சோதனையில் அவரிடம் ஒரு கிலோ 500 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த மூதாட்டியை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அந்த மூதாட்டி சாமநாயக்க ன்பாளையம் இந்திரா நகரை சேர்ந்த சரஸ்வதி (வயது 62) என்பதும் அவர் மீது ஆனைமலை, துடியலூர் உள்பட பல்வேறு போலீஸ் நிலையங்களில் அதிக வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சரஸ்வதி கைது செய்து அவரிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதையடுத்து போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்