search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    தருமபுரியில் 12-ந்தேதி நடக்கிறது:  தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம்
    X

    தருமபுரியில் 12-ந்தேதி நடக்கிறது: தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம்

    • தருமபுரி அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் வருகின்ற 12-ந்தேதி அன்று பிரதம மந்திரி தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் நடைபெறவுள்ளது.
    • தொழிற்பழகுநர் பயிற்சியில் சேர்ந்து தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழ் பெற்று பயன்பெறலாம்.

    தருமபுரி,

    தருமபுரி அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் வருகின்ற 12-ந்தேதி அன்று பிரதம மந்திரி தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் நடைபெறவுள்ளது.

    இதுகுறித்து மாவட்ட கலெக்டர் சாந்தி வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது-

    தருமபுரி அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் வருகின்ற 12-ந்தேதி அன்று காலை 9 மணி முதல் 4 மணிவரை பிரதம மந்திரி தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் நடைபெறவுள்ளது.

    இம்முகாமில் தரும புரி மாவட்டத்தில் உள்ள பொதுத்துறை மற்றும் முன்னணி தனி யார் நிறுவனங்கள் கலந்துக்கொண்டு தொழிற்பழகுநர் பயிற்சிக்கு ஐ.டி.ஐ தேர்ச்சி பெற்றவர்களை தேர்வுசெய்ய உள்ளனர்.

    ஐ.டி.ஐ பயிற்சி பெற்று தேர்ச்சி பெற்ற பயிற்சியாளர்கள் மற்றும் ஐ.டி.ஐ ல் கடந்த ஆண்டு தேர்ச்சி பெற்ற அனைத்து பிரிவு பயிற்சியாளர்களும் முகாமில் கலந்துக் கொண்டு தொழிற்பழகுநர் பயிற்சியில் சேர்ந்து தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழ் பெற்று பயன்பெறலாம்.

    மேலும், இதுநாள் வரை ஐ.டி.ஐ பயிற்சி முடித்து தொழிற்பழகுநர் பயிற்சி பெறாதவர்களும், தொழிற்பழகுநர் பயிற்சி பெற தயார்நிலையில் உள்ளவர்களும் அசல் கல்வி சான்றிதழ்களுடன் இம்முகாமில் கலந்துக் கொண்டு பயன்பெறலாம்.

    மேலும், விவரங்களுக்கு தருமபுரி அரசு தொழிற் பயிற்சி நிலைய வளாகத்தில் இயங்கிவரும் மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குநரை நேரிலோ அல்லது 94999–37454, 94887–09322 மற்றும் 94422–86874 ஆகிய கைப்பேசி எண்கள் மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×