search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    கிணற்றில் மீன் பிடிக்க சென்றவர் நீரில் மூழ்கி சாவு
    X

    கிணற்றில் மீன் பிடிக்க சென்றவர் நீரில் மூழ்கி சாவு

    • இவர் தனது தோட்டத்தில் உள்ள கிணற்றில் மீன் பிடிக்க சென்றுள்ளார்.
    • எதிர்பாராதவிதமாக தவறி உள்ளே விழுந்தவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி அருகேயுள்ள பெத்தனபள்ளி பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 42). இவர் தனது தோட்டத்தில் உள்ள கிணற்றில் மீன் பிடிக்க சென்றுள்ளார்.

    அப்போது எதிர்பாராதவிதமாக தவறி உள்ளே விழுந்தவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார். இது குறித்து அவரது மனைவி மங்கம்மாள் கொடுத்த புகாரின் பேரில் கிருஷ்ணகிரி டவுன் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    இதேபோல கோவிந்தன் கொட்டாய் கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணன் (64) என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்றபோது பெங்களூரு-சேலம் சாலையில் ஆவின் மேம்பாலம் அருகே சென்ற போது நிலை தடுமாறி கீழே விழுந்து அடிபட்டு உயிரிழந்தார்.

    இது குறித்து அவரது உறவினர் கார்த்திக் கொடுத்த புகாரின்பேரில் கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×