என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
ஊட்டியில் 3 மணி நேரம் கொட்டிய கனமழை
- சேரிங்கிராஸ், பஸ் நிலையம், மாா்க்கெட், தலைகுந்தா ஆகிய பகுதிகளில் கனமழை கொட்டித் தீா்த்தது.
- கல்லட்டி பகுதியில் சில குடியிருப்புகளுக்குள் மழைநீா் புகுந்தது.
ஊட்டி,
ஊட்டியில் நேற்று காலை முதல் மந்தமான காலநிலை காணப்பட்டது. பின்னா் மதியம் கனமழை பெய்தது. இதன் காரணமாக ெரயில் நிலையம், படகு இல்லம் ஆகிய பகுதிகளுக்கு செல்ல வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனா்.
சேரிங்கிராஸ், பஸ் நிலையம், மாா்க்கெட், தலைகுந்தா ஆகிய பகுதிகளில் கனமழை கொட்டித் தீா்த்தது. இதன் காரணமாக குளிா்ந்த காலநிலை காணப்பட்டது. மழை காரணமாக பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் விடுதிகளிலும், சுற்றுலா வாகனங்களிலும் முடங்கினா்.
தொடர்ந்து 2 நாட்கள் பெய்த மழை காரணமாக தாழ்வாக உள்ள கல்லட்டி பகுதியில் சில குடியிருப்புகளுக்குள் மழைநீா் புகுந்தது. இதனால் குடியிருப்புவாசிகள் விடிய, விடிய தூங்க முடியாமல் தவித்தனர்.
வீடுகளுக்குள் இருந்த புகுந்த மழைநீரை குடியிருப்புவாசிகள் இன்று காலை வரை வெளியேற்றினா். தொடா் மழை இருக்கும் பட்சத்தில் இப்பகுதி மக்கள் அனைவரும் அருகில் உள்ள முகாம்களில் தங்கவைக்கப்படுவாா்கள் என வருவாய்த் துறையினா் தெரிவித்தனா்.
இதற்கிடையே ஊட்டியில் இருந்து கல்லட்டி மலைப்பாதை வழியாக மைசூா் செல்லும் சாலையில் லேசான மண் சரிவு ஏற்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்