search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    கோவையில் தங்கும் விடுதி உரிமையாளர்கள் மனு
    X

    கோவையில் தங்கும் விடுதி உரிமையாளர்கள் மனு

    • கோவை மாநகரில் 700க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் தங்கும் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.
    • விடுதிக்குள் சோதனை என்ற பெயரில் அத்துமீறி நுழைந்து கட்டாய வரி வசூல் செய்கின்றனர்.

    கோவை,

    கோவையில் உள்ள விடுதி உரிமையாளர்கள் சங்கத்தினர் 50-க்கும் மேற்பட்டோர் இன்று கோவை கலெக்டர் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    கோவை மாநகரில் 700க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் தங்கும் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்வோர் தங்கி உள்ளனர். அவர்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் கட்டணத்தில் சாப்பாடு மற்றும் அறை ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது விடுதி உரிமையாளர்களை ஓட்டல்களுக்கு நிகராக ஜி.எஸ்.டி வரி செலுத்த நிர்பந்திக்கப்படுகின்றனர். மேலும் விடுதிக்கு சோதனை என்ற பெயரில் அத்துமீறி நுழைந்து கட்டாய வரி வசூல் செய்கின்றனர். இதனால் கோவை மாநகரில் செயல்பட்டு வரும் விடுதி உரிமையாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே பெரிய ஓட்டலுக்கு நிகராக வரி வசூலிப்பதை கைவிட்டு விடுதிக்கு என ஜி.எஸ.டி. வரியில் மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

    Next Story
    ×