என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
சேலத்தில் கணவன்- மனைவி தற்கொலை: கந்துவட்டி கேட்டு மிரட்டிய பெண் உள்பட 2 பேர் கைது
- சேலம் இரும்பாலை அருகே உள்ள எஸ்.கொல்லப்பட்டி ஓம் சக்தி நகர் பகுதியில் கந்து வட்டியால் கணவன்- மனைவி தற்கொலை செய்து கொண்டனர்.
- போலீசார் அதிரடியாக செயல்பட்டு கந்துவட்டி கேட்டு மிரட்டிய பெண் உள்பட 2 பேர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சேலம்:
சேலம் இரும்பாலை அருகே உள்ள எஸ்.கொல்லப்பட்டி ஓம் சக்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 65). இவரது மனைவி விஜயா (58). இவர்களுக்கு 2 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர்.லேத் பட்டறை வைத்து நடத்தி வந்த தங்கராஜ் வீட்டு தேவைக்காக ரூ.2 லட்சம் கடன் வாங்கியுள்ளார்.
வாங்கிய பணத்தை கட்ட முடியாததால் கடன் கொடுத்தவர்கள் வடிவேல் வட்டி போட்டு பணத்தைக் கேட்டு கடும் நெருக்கடி கொடுத்தனர். இதனால் மனமுடைந்த தங்கராஜ் கடந்த 8-ம் தேதி பூனைக்காடு பகுதியில் எலி மருந்து சாப்பிட்டு மயங்கி கிடந்தார்.
இதுகுறித்த தகவல் இந்த குடும்பத்தினர் தங்கராஜ் மீட்டு அஸ்தம்பட்டி பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த தங்கராஜ் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக உயிரிழந்தார்.கணவரை மருத்துவமனையில் உடனிருந்து கவனித்து வந்த விஜயா, தங்கராஜ் இறந்ததால் கடும் அதிர்ச்சி அடைந்தார்.
கணவர் இருந்த துக்கம் தாளாமல் இருந்த அவர் நேற்று காலை அதே மருத்துவமனையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தங்கராஜ் மகன் கோபி சூரமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதில் தனது தந்தை தங்கராஜ் ரெட்டியூர் பகுதியைச் சேர்ந்த ராஜா(46) மற்றும் ரெட்டிபட்டி அடுத்த நரசோதிப்பட்டி பகுதி சேர்ந்த கிருஷ்ணன் மனைவி சாவித்திரி என்கிற சித்ரா(45) ஆகியோரிடம் கடந்த 2018 -ம் ஆண்டு தொழிலை அபிவிருத்தி செய்ய ரூ. 4 லட்சம் கடன் வாங்கியதாகவும், அந்த பணத்திற்கு ரூ.10 வட்டி செலுத்தி வந்ததாகவும் வாங்கிய தொகைக்கு 2 மடங்குக்கு மேல் பணம் கட்டியும்,மேலும் பணம் கேட்டு எனது தந்தை தங்கராஜுக்கு நெருக்கடி கொடுத்ததால் தனது தந்தை தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்தார்.
போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி இதுபற்றி விசாரித்து தம்பதி தற்கொலைக்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்ய உத்தரவிட்டார். மாநகர போலீஸ் துணை கமிஷனர் மாடசாமி மேற்பார்வையில் சூரமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார் மற்ற்உம் போலீசார் கந்து வட்டி கொடுமையின் கீழ் வழக்கு பதிவு செய்து ராஜா மற்றும் சாவித்திரி என்ற சித்ராவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மருத்துவமனையில் விஜயா தற்கொலை செய்து கொண்டது குறித்து இறந்து போன தம்பதிகளின் மற்றொரு மகன் ஹரிபாபு கொடுத்த புகார் பேரில் அஸ்தம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கந்து வட்டி கொடுமையால் கணவனும் மனைவியை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்தப் பகுதியில் உள்ளவர்களை கடும் சோகத்தில் ஆழ்த்திய நிலையில் போலீசார் அதிரடியாக செயல்பட்டு இந்த தற்கொலைக்கு காரணமாக கைது செய்து சிறையில் அடைத்தது பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்