search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    இசைஞானி இளையராஜாவுக்கு வழங்கப்பட்ட சோப்எரா புத்தகத்தின் முதல் பிரதி
    X

    இசைஞானி இளையராஜாவுக்கு வழங்கப்பட்ட சோப்எரா புத்தகத்தின் முதல் பிரதி

    • சென்னையில் நடைபெற்ற நிகழ்வில் வெளியானது.
    • காபி டேபிள் புத்தகத்தை ஏவிஏ குழுமம் வெளியிட்டது.

    நம் நாட்டின் பொக்கிஷமான ஆயுர்வேதமும், இசையும் கொண்டிருக்கும் மகத்தான குணமாக்கும் ஆற்றலை ஒருங்கிணைக்கும் வகையில் இந்தியாவின் முன்னணி ஆயுர்வேத தனிநபர் பராமரிப்பு பிராண்டான மெடிமிக்ஸ் தனது 55 ஆண்டுகால பயணத்தை சித்தரிக்கும் வகையில் புத்தகம் ஒன்றை வெளியிட்டது.

    சோப்எரா (Soapera) என்ற பெயரில் மெடிமிக்ஸ் குடும்பம் தயாரித்து இருக்கும் பிரத்யேக காபி டேபிள் புத்தகம் வெளியிடப்பட்டு இருக்கிறது. இந்த நேர்த்தியான புத்தகத்தின் முதல் பிரதி, சென்னையில் நடைபெற்ற நிகழ்வில் வெளியானது.

    நிகழ்ச்சியில் ஏவிஏ சோலையில் ஹெல்த்கேர் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் டாக்டர். ஏவி. அனூப் மற்றும் சோலையில்–இன் நிர்வாக இயக்குனர் திரு. V.S. பிரதீப் ஆகியோர் இசைஞானி இளையராஜாவிடம் நேரில் வழங்கினர்.

    Next Story
    ×