search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தருமபுரியில்டாஸ்மாக் கடைகள் விடுமுறை
    X

    தருமபுரியில்டாஸ்மாக் கடைகள் விடுமுறை

    • தருமபுரி மாவட்டத்தில் வரும் செவ்வாய்க்கிழமை மகாவீர் ஜெயந்தி நாளை முன்னிட்டு மதுக்கடைகள் மூடல்.
    • மீறி எவரேனும் கள்ளத்தனமாக மது விற்பனையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தருமபுரி மாவட்டத்தில் வரும் செவ்வாய்க்கிழமை மகாவீர் ஜெயந்தி நாள் அன்று தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் கீழ் செயல்பாட்டில் உள்ள அரசு மதுபான சில்லறை விற்பனை கடைகள், அவற்றுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் உரிமம் பெற்ற தனியார் ஓட்டல்களின் மதுக்கூடங்கள், முன்னாள் படைவீரர் மதுவிற்பனைக்கூடம் அனைத்தும் மதுபானங்கள் விற்பனை இன்றி மூடிவைக்க உத்தரவிடப்படுகிறது.

    இதனை மீறி எவரேனும் செயல்பட்டாலோ அல்லது கள்ளத்தனமாக மது விற்பனையில் ஈடுபட்டாலோ சட்டப்படியான கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

    Next Story
    ×