search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    கிருஷ்ணகிரியில்   விவசாயிகள் சங்கம் சார்பில் பொதுக்கூட்டம்
    X

    கிருஷ்ணகிரியில் விவசாயிகள் சங்கம் சார்பில் பொதுக்கூட்டம்

    • விவசாயிகள் பெற்ற கடன்கள் அனைத்தில் இருந்தும் விடுதலைப் பெற வேண்டும்.
    • 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்கள் நடந்தது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரியில் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில், உழவர் தினத்தையொட்டி பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடந்தது.

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி பொறுப்பேற்று ஒரு ஆண்டுக்குள், ஒரு லட்சம் விவசாய பம்பு செட்டுக்கு மேல் இலவச மின்இணைப்பு வழங்கிய தமிழக அரசை பாராட்டியும், தேசிய வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மூலம், விவசாயிகள் பெற்ற கடன்கள் அனைத்தில் இருந்தும் விடுதலைப் பெறவும், பால், கரும்பு, மா, தென்னை, நெல், காய்கறி ஆகியவற்றிற்கு உரிய விலை கிடைக்கவும், இலவச மின்சாரம் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்களில் உயிர்நீத்த தியாகிகளின் அஞ்சலி நினைவாக, நேற்று மாலை கிருஷ்ணகிரி எல்.ஐ.சி., அலுவலகத்திலிருந்து ரவுண்டானா வரை விவசாயிகளின் பேரணி நடந்து.

    அதை தொடர்ந்து ரவுண்டானா அருகில் பொதுக்கூட்டம் நடந்தது. மாவட்ட இளைஞர் அணி செயலாளர் வெங்கடேசன் வரவேற்றார். மாவட்ட துணை செயலாளர் அனுமந்தராஜ், மேற்கு மாவட்ட பொருளாளர் சுப்பிரமணிரெட்டி ஆகியோர் ஒருங்கிணைத்தனர். மேற்கு மாவட்டத் தலைவர் வண்ணப்பா, மாவட்ட துணைத் தலைவர் தோப்பைய கவுண்டர், மாவட்ட ஆலோசகர் நசீர்அமகத், மாவட்ட மகளிர் அணி தலைவி பெருமா, மாவட்ட துணைத் தலைவர் வேலு, மாவட்ட துணை செயலாளர் வரதராஜ், மாவட்ட இளைஞர் அணி தலைவர் சத்தியமூர்த்தி, மாவட்ட துணை செயலாளர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் இந்திய மஞ்சள் விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர், தேசிய செயலாளர், விவசாயிகள் சங்கங்களின் கூட்டு இயக்க பொதுச் செயலாளர் ராமகவுண்டர் தலைமை வகித்தார். இந்திய மஞ்சள் விவசாயிகள் சங்கத் தலைவர் தெய்வ சிகாமணி, தென்னிந் திய விவசாயிகள் சங்கத் தலைவர் நரசிம்மம் நாயுடு ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

    Next Story
    ×