search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாழப்பாடியில்  காசநோய் விழிப்புணர்வு கருத்தரங்கு
    X

    கருத்தரங்கில் பேசிய வாழப்பாடி பேரூராட்சி தலைவி கவிதா சக்கரவர்த்தி.

    வாழப்பாடியில் காசநோய் விழிப்புணர்வு கருத்தரங்கு

    • காசநோய் விழிப்புணர்வு கருத்தரங்கு, வாழப்பாடி வட்டாட்சியர் அலுவ லகத்தில் நடைபெற்றது.
    • காச நோய் பிரிவு துணை இயக்குனர் கணபதி, காசநோய் பரவும் விதம், தடுப்பு முறைகள், காச நோயாளிகளுக்கான அரசின் நலத்திட்ட உதவிகள் குறித்து விழிப்புணர்வு கருத்துரை வழங்கினார்.

    வாழப்பாடி:

    வாழப்பாடி வட்டாரத்தி லுள்ள கிராம ஊராட்சி தலைவர்கள், பேரூராட்சி தலைவர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கான, காசநோய் விழிப்புணர்வு கருத்தரங்கு, வாழப்பாடி வட்டாட்சியர் அலுவ லகத்தில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு, வட்டார மருத்துவ அலுவலர் பொன்னம்பலம் தலைமை வகித்தார். வாழப்பாடி துணை வட்டாட்சியர் ஜெயலட்சுமி முன்னிலை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் அண்ணாதுரை வரவேற்றார்.

    சேலம் மாவட்ட காச நோய் பிரிவு துணை இயக்குனர் கணபதி, காசநோய் பரவும் விதம், தடுப்பு முறைகள், காச நோயாளிகளுக்கான அரசின் நலத்திட்ட உதவிகள் குறித்து விழிப்புணர்வு கருத்துரை வழங்கினார்.உலக சுகாதார நிறுவனத்தின் காச நோய் பிரிவு ஆலோசகர் மருத்துவர் பிரபு, காச நோயின் வீரியம், உரிய சிகிச்சை எடுக்காவிடில் ஏற்படும் பக்கவிளைவுகள் குறித்தும், பேளூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் ராகுல், காசநோயின் பரிசோதனை முறைகள் , ஊட்டச்சத்து உணவுகள் குறித்தும், காச நோய் மேற்பார்வையாளர் சதாசிவம் மாத்திரைகள் உட்கொள்ளும் வழிமுறை கள் குறித்தும் விளக்கினர்.

    வாழப்பாடி பேரூராட்சி தலைவர் கவிதா சக்கர வர்த்தி, பேளூர் பேரூராட்சி தலைவர் ஜெயசெல்வி பாலாஜி மற்றும் வாழப்பாடி ஒன்றியத்திலுள்ள 20 கிராம ஊராட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.வட்டார சுகாதார மே ற்பார்வையாளர் சீனிவாசன், சுகாதார ஆய்வாளர்கள் செல்வபாபு, சுந்தரம், கந்தசாமி, பேளூர் வட்டார காச நோய் பிரிவு

    மேற்பார்வையாளர் ராஜ்கு மார் கருத்தரங்கி ற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். நிறைவாக, மாவட்ட காச நோய் திட்ட ஒருங்கிணைப்பாளர் பாண்டியராஜன் நன்றி கூறினார்.

    Next Story
    ×