search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    மதுக்கூரில், மா. கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டம்
    X

    காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர்.

    மதுக்கூரில், மா. கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டம்

    • 100 நாள் வேலை திட்டத்தில் முறையாக சம்பளம் வழங்கப்படாமல் உள்ளது.
    • பொதுமக்கள் நலன் கருதி சம்பள பாக்கியை உடனடியாக வழங்க வேண்டும்.

    மதுக்கூர்:

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில், வேலை பார்த்தவர்களுக்கு மாதக்கணக்கில் வழங்கப்படாமல் உள்ள சம்பளத்தை வழங்காத பாஜக அரசை கண்டித்தும், சம்பள பாக்கியை நிலுவையின்றி உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மதுக்கூர் ஒன்றியக் குழு சார்பில், மதுக்கூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு மனுக்கொடுத்து காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

    போராட்டத்திற்கு, சிபிஎம் ஒன்றியச் செயலாளர் சிதம்பரம் தலைமை வகித்தார்.

    மாவட்டச் செயற்குழு உறுப்பி னர் ஆர்.கலைச்செல்வி காத்திருப்பு போராட்டத்தை துவக்கி வைத்து உரையாற்றினார்.

    முடிவில் மாவட்டச் செயலாளர் பாண்டியன் நன்றி கூறினார்.

    காத்திருப்பு போரா ட்டத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் மாதக் கணக்கில் வேலை பார்த்தவர்களுக்கு முறையாக சம்பளங்கள் வழங்கப்படாமல் உள்ளது.

    அதனை உடனடியாக வழங்க வேண்டும்.

    தீபாவளி பண்டிகை காலத்தில் பொதுமக்கள் நலன் கருதி சம்பள பாக்கியை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

    Next Story
    ×