search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகையில், பொதுமக்கள் குறைதீர் முகாம்
    X

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் பொதுமக்களிடம் மனுக்கள் வாங்கினார். 

    நாகையில், பொதுமக்கள் குறைதீர் முகாம்

    • பொதுமக்கள் தங்களது குறைகளை நேரடியாக தெரிவிக்க இலவச எண்கள்.
    • கஞ்சா விற்பனை குறித்து பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் பொதுமக்களை நேரில் சந்தித்து அவர்களது குறைகளை கேட்டறிந்து 14 மனுக்களை பெற்றார். அதில் 7 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.

    மேலும் மீதமுள்ள மனுக்கள் மீதான நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்படும் என்று பொதுமக்களிடம் உறுதி அளித்தார். மேலும் ஒவ்வொரு வாரம் புதன்கிழமை தோறும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் மனு நாள் நடைபெறும் என்று தெரிவித்து உள்ளார்கள்.

    காவல்துறையிடம் பொதுமக்கள் தங்களது குறைகளை நேரடியாக தெரிவிக்க இலவச எண்கள் (10581) மூலம் கள்ளச்சாராய விற்பனை, கஞ்சா விற்பனை மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள பிரச்சினைகள் குறித்து புகார் தெரிவிக்கலாம் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்தார்.

    மேலும் இந்நிகழ்ச்சியில், நாகப்பட்டினம் குற்றபதிவேடு கூடம் துணை சூப்பிரண்டு பிலிப் பிராங்கிளின் கேன்னடி. மற்றும் காவல் துறையினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×