search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    கச்சா எண்ணை குழாயில் உடைப்பு ஏற்பட்ட பட்டினச்சேரியில் கலெக்டர் திடீர் ஆய்வு
    X

    கலெக்டர் அருண் தம்புராஜ்.

    கச்சா எண்ணை குழாயில் உடைப்பு ஏற்பட்ட பட்டினச்சேரியில் கலெக்டர் திடீர் ஆய்வு

    • மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை கைவிட்டு மீன்பிடிக்க செல்ல வேண்டும்.
    • மறு உத்தரவு வரும் வரை கச்சா எண்ணை கொண்டு செல்லும் பணியில் நிர்வாகம் ஈடுபடக்கூடாது.

    நாகபட்டினம்:

    நாகை மாவட்டம் நாகூர் பட்டினச்சேரியில் கடலுக்கு அடியில் போடப்பட்ட கச்சா எண்ணெய் குழாயில் கடந்த சில தினங்களுக்கு முன்பு உடைப்பு ஏற்பட்டது.

    அதில் இருந்து வெளியேறிய கச்சா எண்ணெய் கடலில் மிதந்து சுற்றுச்சூழல் மாசடைந்து, கண் எரிச்சல் போன்ற உடல் உபாதைகளுக்கு ஆளாகினர்.

    உடைந்த குழாயை சரி செய்யும் பணியில் கடந்த 4 நாட்களாக சிபிசிஎல் ஆலை தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர். இதனிடையே குழாயின் ஓட்டையை சிபிசிஎல் நிர்வாகம் நேற்று இரவு மீண்டும் சீரமைத்தது.

    இதனிடையே கச்சா எண்ணெய் குழாயை அகற்றக்கோரி வேலை நிறுத்த போராட்டத்தில் 4-வது நாளாக ஈடுபட்டு வரும் நாகூர் பட்டினச்சேரி மீனவர்களை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் இன்று நேரில் சந்தித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை கைவிட்டு மீன்பிடிக்க செல்ல வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

    பின்னர் நிருபர்களிடம் கலெ க்டர் அருண் தம்புராஜ் கூறியதாவது, கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் பைப் லைன் உடை ப்பை சீரமைத்து விட்டதாகவும், மீனவ ர்கள் யாரும் அச்சம் கொள்ள தேவையில்லை என கூறியதுடன், மாவட்ட நிர்வாகம் சார்பில் மறு உத்தரவு வரும் வரை பைப் லைன்னில் கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் பணியில் சிபிசிஎல் நிர்வாகம் ஈடுபட கூடாது என பொது மேலாளரிடம் கூறி இருப்பதாக தெரிவித்தார்.

    மேலும் கச்சா எண்ணெய் கடலில் கலந்து இருப்பதால், கடல் வாழ் உயிரினங்களின் பாதிப்பு குறித்தும்,கடல் நீர் தன்மை குறித்தும் சென்னையில் இருந்து வரும் தொழில்நுட்ப அதிகாரிகள் அதனை ஆய்வு செய்ய இருப்பதாகவும் கலெக்டர் தெரிவித்தார்.

    Next Story
    ×