search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையில்  பெண்கள் சமத்துவநாள் கொண்டாட்டம்
    X

    அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையில் பெண்கள் சமத்துவநாள் கொண்டாடப்பட்ட காட்சி.

    அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையில் பெண்கள் சமத்துவநாள் கொண்டாட்டம்

    • பெண்கள் சமத்துவ தினமாக அறிவிக்கப்பட்டு உலக முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
    • அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் பாலின உணர்திறன் அமைப்பின் மூலம் இத்தினம் கல்லூரி வளாகத்தில் கொண்டாப்பட்டது.

    சேலம்:

    பெண்களுக்கான சமத்துவம் மற்றும் ஓட்டு ரிமை வழங்கப்பட்ட நாளான ஆகஸ்ட் மாதம் 26-ம் தேதியை நினைவுகூறும் விதமாக பெண்கள் சமத்துவ தினமாக அறிவிக்கப்பட்டு உலக முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

    இதனை முன்னிட்டு விநாயகா மிஷனின் விம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் உள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் பாலின உணர்திறன் அமைப்பின் மூலம் இத்தினம் கல்லூரி வளாகத்தில் கொண்டாப்பட்டது. நிகழ்ச்சிக்கு துறையின் டீன் டாக்டர்.செந்தில்குமார் முன்னிலை வகித்து வரவேற்புரை வழங்கினார். சிறப்பு அழைப்பாளராக சேலம் மாவட்ட நகர்புற மாவட்ட கல்வி அதிகாரி டாக்டர்.உதயகுமார் மற்றும் சேலம் மாவட்ட சமூக நல அலுவலகத்தின் ஆலோசகர்கள் அன்னம் மற்றும் சத்யா ஆகியோர் கலந்து கொண்டு அரசின் பெண்களுக்கான நலத்திட்ட உதவிகள் குறித்து எடுத்துரைத்தனர்.

    மேலும் இத்தினம் குறித்த விழிப்புணர்வை மாணவர்களுக்கு வலியு றுத்தும் நோக்கத்தோடு பல்வேறு போட்டிகளும் நடத்தப்பட்டது. இப்போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியின் முடி வில் அமைப்பின் பொறுப்பாளர் தமிழ்சு டர் நன்றிகூறினார். இதற்கான அனைத்து ஏற்பாட்டி னையும் துறையின் உதவி பேராசிரியர் டாக்டர்.தனசேகர் மற்றும் உதவி பேராசிரியை வளர்மதி ஆகியோர் செய்திருந்தனர்.

    Next Story
    ×