search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர் மழை எதிரொலி
    X

    மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர் மழை எதிரொலி

    • மலையை ஒட்டியுள்ள நீர் பிடிப்பு பகுதிகள் மற்றும் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
    • மெயின் அருவி, ஐந்தருவிக்கு தண்ணீர் வரத்து சற்று அதிகரித்து காணப்படுகிறது.

    தென்காசி:

    தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கன மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

    இந்நிலையில் தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் தொடரும் மழையின் காரணமாக மலையை ஒட்டியுள்ள நீர் பிடிப்பு பகுதிகள் மற்றும் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

    குறிப்பாக முக்கிய சுற்றுலா தளமாக விளங்கி வரும் குற்றால அருவிகளான பழைய குற்றாலம், மெயின் அருவி, ஐந்தருவிக்கு தண்ணீர் வரத்து சற்று அதிகரித்து காணப்படுகிறது.

    பழைய குற்றால அருவிக்கு மேல் பகுதியில் உள்ள மலைப் பகுதியில் அதிக அளவு மழை பெய்ததன் காரணமாக இரவு முதல் பழைய குற்றால அருவிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

    மேலும் தொடர்ந்து மழை பெய்யும் பட்சத்தில் குற்றால அருவிகளுக்கு தண்ணீர் வரத்து மேலும் அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×