search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சோலையார் அணை நிரம்பியது- தண்ணீர் திறப்பு
    X

    சோலையார் அணை நிரம்பியது- தண்ணீர் திறப்பு

    • கூழாங்கல் ஆறுகளில் வெள்ளம் கரைபுண்டு ஓடுகிறது.
    • அணைக்கு வரும நீரின் அளவு அதிகரித்து காணப்பட்டது.

    வால்பாறை:

    கோவை மாவட்டம் வால்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.

    மழையால் ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுகின்றன. சாலைகளில் மண்சரிவு ஏற்பட்டு போக்குவரத்தும் தடைபட்டு வருகிறது.

    தொடர் மழையால் வால்பாறை பகுதிகளில் கடுமையான குளிரும் நிலவி வருகிறது. நேற்றும் வால்பாறை பகுதிகளில் மழை பெய்தது.

    வால்பாறை, சின்னக்கல்லார், நீரார், சின்கோனா, ஹைபாரஸ்ட், வாகமலை, தலனார், வில்லோணி, புதுத்தோட்டம் பகுதிகளில் பலத்த மழை கொட்டியது.

    மழையால் வால்பாறை சுற்றுவட்டாரத்தில் உள்ள நடுமலையாறு, கூழாங்கல் ஆறுகளில் வெள்ளம் கரைபுண்டு ஓடுகிறது. அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்து நிரம்பி வருகின்றன.

    சோலையார் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால், அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்து காணப்பட்டது.

    தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்ததால் சோலையார் அணை தனது முழு கொள்ளளவான 165 அடியை எட்டியது.

    அணை முழு கொள்ளளவை எட்டியதை அடுத்து அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. மதகுகள் வழியாக தண்ணீர் சீறிப்பாய்ந்து செல்கிறது. அணைக்கு வினாடிக்கு 9241.37 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு மதகு வழியாக 2, 745 கன அடி நீரும், சேடல் வழியாக 5,639.93 கன அடியும், மின் உற்பத்தி நிலையத்திற்கு 1,410 கன அடி என மொத்தம் 9,816 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    Next Story
    ×