search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    beach boys walkers group
    X

    78-வது சுதந்திர தினம் - பெசன்ட் நகரில் கொடியேற்றி கொண்டாட்டம்

    • பீச் பாய்ஸ் வாக்கர்ஸ் குழு சார்பில் கொடியேற்றப்பட்டது.
    • கொடியேற்ற நிகழ்ச்சியில் பீச் பாய்ஸ் வாக்கர்ஸ் குழுவுடன் பலர் கலந்து கொண்டனர்.

    78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் பீச் பாய்ஸ் வாக்கர்ஸ் (Beach boys walkers) சார்பாக இன்று தேசிய கொடி ஏற்றபட்டது. இந்த நிகழ்ச்சியில் பால சுந்தரம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றினார்.

    இந்த ஆண்டு கொடியேற்ற விழாவில் அடையார் ஆனந்த பவன் நிர்வாக இயக்குநர் திரு. கே.டி. வெங்கடேசன், பீச் பாய்ஸ் அட்மின் மோகன் ராகவன், முன்னாள் அட்மின் ஏழுமலை, மீடியா95 சிஇஓ பழனி ராஜா மற்றும் பீச் பாய்ஸ் குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


    கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பீச் பாய்ஸ் வாக்கர்ஸ் குழு சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்தன்று சென்னை பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் தேசிய கொடி ஏற்றி வருவது குறிப்பிடதக்கது.

    Next Story
    ×