search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புகையில்லா போகிப்பண்டிகை கொண்டாட வலியுறுத்திவிழிப்புணர்வு பேரணி
    X

    புகையில்லா போகிப்பண்டிகை கொண்டாட வலியுறுத்திவிழிப்புணர்வு பேரணி

    • தமிழ்நாடு முழுவதும் வருகின்ற 14-ந் தேதி போகிப்பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.
    • 50-க்கும் மேற்பட்டோர் இந்த விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்டனர்.

    கோவை

    தமிழ்நாடு முழுவதும் வருகின்ற 14-ந் தேதி போகிப்பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. போகிப்பண்டிகையன்று தேவையற்ற பொருட்களை எரிப்பதனால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுகிறது. இதனையொட்டி தமிழ்நாடு அரசு பொதுமக்களிடையே உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் விழிப்புணர்வினை ஏற்படுத்த அறிவுறுத்தியு ள்ளது. அதன் ஒருபகுதியாக மேட்டுப்பாளையம் நகராட்சி சார்பில் பொதுமக்களிடையே புகையில்லா போகிப்பண்டிகையை கொண்டாட வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதனை மேட்டுப்பாளையம் நகர்மன்றத்தலைவர் மெஹரீபா பானு அஷ்ரப் அலி, துணைத்தலைவர் அருள்வடிவு முனுசாமி உள்ளிட்டோர் தொடங்கி வைத்தனர். இதில் பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறும், கோஷமிட்டும் ஊர்வல மாக சென்றனர். மேட்டுப்பா ளையம் நகராட்சி பொறியாளர் சோமசு ந்தரம், சுகாதார ஆய்வாளர் பாஸ்கரன், மேற்பார்வையாளர் மணி மற்றும் பரப்புரையாளர்கள், மேற்பார்வையாளர்கள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் இந்த விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×