search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வலங்கைமானில், நாளை முதல் 3 நாட்களுக்கு ஜமாபந்தி
    X

    வலங்கைமானில், நாளை முதல் 3 நாட்களுக்கு ஜமாபந்தி

    • பயத்தஞ்சேரி, கொட்டையூர் உள்ளிட்ட 23 வருவாய் கிராமங்களுக்கும் ஜமாபந்தி நடைபெறுகிறது.
    • பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் குறித்து மனு அளிக்கலாம்.

    நீடாமங்கலம்:

    வலங்கைமான் தாசில்தார் அன்பழகன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது :-

    வலங்கைமான் தாலுகாவில் 71 வருவாய் கிராமங்கள் உள்ளது.

    1432 ஆம் பசலி ஆண்டு வருவாய் தீர்வாய கணக்கு முடிப்பு (ஜமாபந்தி) வலங்கைமான் தாலுக்கா அலுவலகத்தில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் விஜயின் தலைமையில் நாளை (புதன்கிழமை) தொடங்கி வரும் 26-ந் தேதி வரை 3 நாட்கள் நடைபெற உள்ளது.

    இதில் நாளை ஆவூர் உள்வட்டத்தைச் சேர்ந்த அன்னுக்குடி, சாலபோகம், உத்தமதானபுரம், மூலாழ்வா ஞ்சேரி, அவிச்சாகுடி, நல்லூர், ரங்கநாதபுரம், கிளியூர், இனாம்கிளியூர், கோவிந்தகுடி, வாணிய க்கரம்பை, சிங்காரம்பாளையம், வீராணம், நல்லம்பூர் ஆவூர் ஊத்துக்காடு, வேலூர் ஏரி, மணலூர், மதகரம்,மாளிகை திடல், வேலங்குடி, வீரமங்கலம், களத்தூர், மணக்கால், சடையங்கால், முனியூர், கிளியூர், அவளிவநல்லூர், 47 ரங்கநாதபுரம், உள்ளிட்ட 31 வருவாய் கிராமங்களுக்கு ஜமாபந்தி நடக்கிறது.

    25 ஆம் தேதி வலங்கைமான் உள் வட்டத்தைச் சேர்ந்த சந்திரசேகரபுரம் வலங்கை மான் மேல விடையல், கீழ விடையல், கண்டியூர், சித்த ன்வவாழூர், செம்மங்குடி, தொழுவூர், விருப்பாச்சிபுரம், ஆதிச்சமங்கலம், 18 ரெகுநாதபுரம், வடக்கு பட்டம், தெற்கு பட்டம், புளியகுடி, பாடகச்சேரி, மாத்தூர், மருவத்தூர், கிராமம் உட்பட 17 வருவாய் கிராம ங்களுக்கு நடைபெறுகிறது.26 ஆம் தேதி ஆலங்குடி உள் வட்டத்தைச் சேர்ந்த திருவோணமங்கலம், அமராவதி சாரநத்தம், ராஜேந்திரன் நல்லூர், ஆலங்குடி, பூந்தோட்டம், பெருங்குடி, அரித்துவார மங்கலம், கேத்தனூர், நெம்மேலிகுடி, படுகை நெம்மேலிகுடி, எருமை படுகை, நார்த்தங்குடி, புலவர் நத்தம், பூனாயிருப்பு, ரகுநாதபுரம், மாணிக்க மங்கலம், பாப்பாக்குடி, அரவத்தூர், அரவூர், பயத்தஞ்சேரி, கொட்டையூர் உள்ளிட்ட 23 வருவாய் கிராமங்களுக்கும் ஜமாபந்தி நடைபெறுகிறது.

    மேற்கண்ட ஜமாபந்தியில் பொதுமக்கள் பட்டா மற்றும் பட்டா நகல் கோருதல், பட்டா மாறுதல் கோருதல் மற்றும் இதர கோரிக்கைகள் குறித்து மனு அளித்து பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×