search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அ.தி.மு.க. பொதுக்குழு குறித்து திங்கட்கிழமை நல்ல தீர்ப்பு கிடைக்கும் - ஜெயக்குமார் உறுதி
    X

    முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

    அ.தி.மு.க. பொதுக்குழு குறித்து திங்கட்கிழமை நல்ல தீர்ப்பு கிடைக்கும் - ஜெயக்குமார் உறுதி

    • அ.தி.மு.க. தலைமை அலுவலகத்திற்கு பாதுகாப்பு கேட்டு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மனு அளித்தார்.
    • அ.தி.மு.க. பொதுக்குழு குறித்து திங்கள்கிழமை நல்ல தீர்ப்பு கிடைக்கும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

    சென்னை:

    சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் சில சமூக விரோதிகள் ஊடுருவ வாய்ப்பு இருப்பதாக கூறி அலுவலகத்திற்கு பாதுகாப்பு கேட்டு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று மனு அளித்தார். அதன்பின் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது:

    சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் சில சமூக விரோதிகள் ஊடுருவ வாய்ப்பு இருப்பதாக நம்பத்தகுந்த தகவல் எங்களுக்கு கிடைத்தது. அதன் அடிப்படையில் புகார் அளித்துள்ளோம். உரிய நடவடிக்கை எடுப்பதாக காவல்துறையினர் உறுதி அளித்துள்ளனர்.

    நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள ஒரு பிரச்சினை குறித்து வெளியே விவாதிப்பது என்பது ஒரு நல்ல ஆரோக்கியமான விஷயம் கிடையாது. விவாதங்கள் முடிந்துவிட்டன. எனவே ஒரு நல்ல தீர்ப்பை நாங்கள் எதிர்பார்க்கிறோம். அதன்படி அ.தி.மு.க. பொதுக்குழு குறித்து வரும் திங்கள்கிழமை 100 சதவீதம் நல்ல தீர்ப்பு கிடைக்கும் என நாங்கள் நம்புகிறோம் என தெரிவித்தார்.

    Next Story
    ×