search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலூர் பஸ் நிலையத்தில் வாலிபரிடம் நகை-செல்போன் திருட்டுமர்ம நபர்கள் கைவரிசை
    X

    கடலூர் பஸ் நிலையத்தில் வாலிபரிடம் நகை-செல்போன் திருட்டுமர்ம நபர்கள் கைவரிசை

    • கடலூர் பஸ் நிலையத்தில் வாலிபரிடம் நகை திருடப்பட்டது.
    • அப்போது ஒரு வாலிபர் ஆனந்தராஜா பாக்கெட்டில் இருந்த செல்போனை பறித்துக் கொண்டு ஓடினார்

    கடலூர், :

    கடலூர் மாவட்டம் புவனகிரி கொத்தட்டைைய சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 40). சம்பவத்தன்று பிரகாஷ் தனது உறவினர் திருமணத்திற்கு சென்று விட்டு, தனது வீட்டிற்கு செல்வதற்காக கடலூர் பஸ் நிலையத்தில் அமர்ந்திருந்தார். அப்போது திடீரென்று பிரகாஷ் தூங்கிவிட்டார். தூக்கத்திலிருந்து விழித்து பார்த்தபோது அவர் அணிந்திருந்த 4 கிராம் தங்க மோதிரம், செல் மற்றும் அரசு ஆவண கார்டு அனைத்தையும் மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது. இதன் மதிப்பு சுமார் 25 ஆயிரம் ஆகும். இது குறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் நிலையத்தில் பிரகாஷ்கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பஸ் நிலையத்தில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவை சோதனை செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


    கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் கடலூர் எம்.புதூரை சேர்ந்த ஆனந்தராஜா (வயது 33) என்பவர் தூங்கி கொண்டு இருந்தார். அப்போது ஒரு வாலிபர் ஆனந்தராஜா பாக்கெட்டில் இருந்த செல்போனை பறித்துக் கொண்டு ஓடினார். இதில் திடீரென்று விழித்துக் கொண்ட ஆனந்தராஜா அந்த வாலிபரை பின்தொ டர்ந்து திருடன் திருடன் என கத்திக்கொண்டு துரத்தினார். ஆனால் அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இது குறித்து கடலூர் புதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×