search icon
என் மலர்tooltip icon

    கள்ளக்குறிச்சி

    • ஸ்ரீதர் என்று தன்னை அறிமுகம் செய்து கொண்ட அவர், தினமும் அனிதாவிற்கு போன் செய்து பேசிக்கொண்டிருந்தார்.
    • மேலும், தான் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிளையும் காணவில்லை.

    விழுப்புரம்:

    புதுவை மாநிலம் திருக்கனூர் பகுதியை சேர்ந்தவர் அனிதா (வயது 28). திருமணமானவர். வீட்டு வேலைகளை கவனித்து வருகிறார். இவரது செல்போனுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பாக புதிய எண்ணில் இருந்து போன் வந்தது. செல்போனை எடுத்து பேசியபோது, எதிர்தரப்பில் இருந்து ஆண் நபரின் குரல் கேட்டது. அவர் எண்களை தவறாக போட்டதால் தனக்கு போன் வந்ததை உணர்ந்த அனிதா, அவரிடம் அதனைக் கூறி தொடர்பை துண்டித்துள்ளார். இருந்தபோதும் அவர் தினமும் போன் செய்துள்ளார். புதுவை வில்லியனூர் அடுத்த சுல்தான்பேட்டையை சேர்ந்த ஸ்ரீதர் என்று தன்னை அறிமுகம் செய்து கொண்ட அவர், தினமும் அனிதாவிற்கு போன் செய்து பேசிக்கொண்டிருந்தார். இது நட்பாக மாறி நாளடைவில் கள்ள க்காதலாக மாறியுள்ளது.

    இதனையடுத்து இருவரும் சந்திக்க திட்டமிட்டு, நேற்று ஆரோவில் பகுதியில் உள்ள முந்திரி காட்டில் சந்தித்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அனிதா திடீரென மயக்கமடைந்துள்ளார். சிறிது நேரம் கழித்து கண்விழித்த போது, கழுத்தில் இருந்த 3 பவுன் செயினை காணவில்லை. மேலும், தான் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிளையும் காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அனிதா, ஸ்ரீதருக்கு போன் செய்துள்ளார். அவருடைய செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. பதறிப்போன அனிதா, இது குறித்து கோட்டக்குப்பம் போலீசாரிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் தொடர்புடைய ஸ்ரீதரை போலீசார் தேடி வருகின்றனர்.

    • ரமேஷ் சொந்த பணிக்காக சின்சேலத்திற்கு மோட்டார் சைக்கிளில் வந்தார்.
    • அவ்வழியே சென்றவர்கள் இது குறித்து கீழக்குப்பம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    சேலம் மாவட்டம் தலைவாசல் அடுத்த வீரங்கனூரை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 44). வியாபாரி. இவர் சொந்த பணிக்காக சின்சேலத்திற்கு மோட்டார் சைக்கிளில் வந்தார். அப்போது கொரல் அருகேயுள்ள சாலையில் வந்த போது, நிலை தடுமாறி சாலை அருகே இருந்த பள்ளத்தில் மோட்டார் சைக்கிளுடன் விழுந்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.

    அவ்வழியே சென்றவர்கள் இது குறித்து கீழக்குப்பம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், ரமேஷின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குடிநீர் பைப்லைன் குழாய் கடந்த 3 நாட்களுக்கு முன்பாக உடைந்து குடி தண்ணீர் சாலை ஆறுபோல வழிந்தோடி வருகிறது.
    • அசுத்தமான நீர் மூலம் பொதுமக்களுக்கு உடல் நல பாதிப்பு ஏற்படும் வண்ணமும் உள்ளது.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் ஒன்றியம் திருநாவலூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் சுமார் 3500 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த பகுதி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு உள்ள குடிநீர் பைப்லைன் குழாய் கடந்த 3 நாட்களுக்கு முன்பாக உடைந்து குடிதண்ணீர் சாலை ஆறுபோல வழிந்தோடி வருகிறது. இதனால் இந்த பகுதி மக்களின் அன்றாட பயன்பாட்டிற்கு குடிநீரை பயன்படுத்த முடியால் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் சாலையில் ஆறுபோல் வழிந்தோடும் நீரை விவசாய மோட்டார் மூலம் பொதுமக்கள் பலக்கத்திற்கு உபயோப்படுத்தி வருகின்றனர். குறிப்பாக சாலை முழுவதும் குடிநீர் சூழ்ந்துள்ளதால் அந்த பகுதி வழியாக வாகனங்கள் செல்லமுடியாமலும், 3 நாட்கள் குடிநீர் அந்த பகுதியில் சூழ்ந்து உள்ளதால் அசுத்தமான நீர் மூலம் பொதுமக்களுக்கு உடல் நல பாதிப்பு ஏற்படும் வண்ணமும் உள்ளது.

    குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரிசெய்ய அந்த பகுதி மக்கள் திருநாவலூர் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் சென்று கூறினர். ஆனால் இதுநாள் வரை எந்தவித நடிவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் மாவட்ட கலெக்டர் இதில் தலையிட்டு உரிய அதிகாரிகள் மூலம் இந்த பகுதியில் குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரிசெய்து வீணாக சாலையில் செல்லும் குடிநீரை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவருமாறு அந்த பகுதி மக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுகின்றனர்.

    • தொழில்நுட்பம் குறித்த மாவட்ட அளவிலான விவசாயிகள் கருத்தரங்கு நடைபெற்றது.
    • சமீப காலங்களில் தக்காளி விலையேற்றத்தை அறிந்திருப்பீர்கள்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி அருகே நீலமங்கலம் கிராமத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில், குறுகிய காலத்தில் அதிக வருமானம் தரும் காய்கறிகள் சாகுபடி தொழில்நுட்பம் குறித்த மாவட்ட அளவிலான விவசாயிகள் கருத்தரங்கு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமை தாங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது, கடந்த சில ஆண்டுகளாக சரியான அளவீட்டில் மழை பெய்து வருவதால் தண்ணீர் தட்டுப்பாடு இல்லாமல் கரும்பு, நெல் போன்ற பயிர்களை விவசாயிகள் அதிக அளவில் சாகுபடி செய்து வருகின்றனர். விவசாயிகள் ஒரே பயிரை மட்டும் பயிரிடாமல் பல்வேறு வகையான மாற்றுப் பயிர்களை மாற்றி பயிரிட்டால் அதிக அளவில் லாபம் ஈட்ட முடியும். தற்போது உள்ள வாழ்வியல் சூழ்நிலையில், மனிதன் ஆரோக்கியமாக வாழ்வதற்காக சிறுதானியங்களை, அதிக அளவில் பயிரிட விவசாயிகள் முன்வர வேண்டும்.

    சமீப காலங்களில் தக்காளி விலையேற்றத்தை அறிந்திருப்பீர்கள், எனவே காய்கறிகளும் பெருமளவில் பயிரிட வேண்டும். இதற்கான ஆலோசனைகளும், சந்தேகங்களையும் வேளாண் விஞ்ஞானிகளிடம் தெரிந்து கொண்டு செயல்படவேண்டும் என மாவட்ட கலெக்டர் தெரிவித்தார். முன்னதாக வேளாண் தொழில் நுட்பங்கள் அடங்கிய கையேட்டினை வெளியிட்டார். மேலும் வேளாண் கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சியில், வேளாண்மை இணை இயக்குநர் கருணாநிதி, துணை இயக்குநர் தோட்ட கலை துறை சசிகலா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) விஜயராகவன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் தியாகராஜன், வாழ வச்சனூர் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய கவின்னோ, யசோதா, கார்த்திகேயன், வேளாண்மை துணை இயக்குநர் வேளாண் வணிகம் (பொ) சத்திமூர்த்தி, தோட்டக்கலை உதவி இயக்குநர் முரளி, விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • பாண்டுரங்கன் நிலத்திற்கு செல்வதற்காக ஏரிக்கரையில் இறங்கு ம்போது எதிர்பாராத விதமாக மூதாட்டியை பாம்பு கடித்தது.
    • இது குறித்து கீழ்குப்பம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள உலகியநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில் .இவரது தாயார் முத்தம்மாள் (வயது 70) இவர்கள் விவசாய தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முத்தம்மாள் தனது மற்றொரு மகனான பாண்டுரங்கன் நிலத்திற்கு செல்வதற்காக ஏரிக்கரையில் இறங்கு ம்போது எதிர்பாராத விதமாக மூதாட்டியை பாம்பு கடித்தது. இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் மூதாட்டியை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு பொது மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி முத்தம்மாள் பரிதாபமாக இறந்து போனார். இது குறித்து செந்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் கீழ்குப்பம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • ஷோரூமிற்கு மோட்டார் சைக்கிள் வாங்குவதற்கு சென்றார்.
    • சிகிச்சை அளித்தும் பலனின்றி வினீத்குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை கீரனூர் காலனி பகுதியை சேர்ந்தவர் வினீத்குமார். இவர் இன்று மதியம் இவருடைய சித்தி கற்பகத்துடன் அதே பகுதி விருத்தாசலம் செல்லும் சாலையில் உள்ள பழைய மோட்டார் சைக்கிள் ஷோரூமிற்கு மோட்டார் சைக்கிள் வாங்குவதற்கு சென்றார். அப்போது ஷோரூமில் மோட்டார் சைக்கிளை எடுத்து சாலையில் நிறுத்தியபோது அந்த வழியாக வந்த அரசு பஸ் இவர்கள் மீது வேகமாக மோதியது.

    இந்த விபத்தில் சம்பவ இடத்திலே வினீத்குமாரின் சித்தி கற்பகம் உயிரிழந்தார். இதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்து விபத்தில் படுகாயம் அடைந்த வினீத்குமாரை மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளித்தும் பலனின்றி வினீத்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த உளுந்தூர்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விபத்தில் உயிரிழந்த வினீத்குமார், அவரது சித்தி கற்பகம் ஆகியோரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 200-க்கும் மேற்பட்ட போலீசார் மையனூர், லா.கூடலூர், மாடாம்பூண்டி கூட்டு ரோடு வனப்பகுதி மற்றும் அதைச் சுற்றி உள்ள கிராமங்களில் டிரோன் கேமரா மூலம் ஆய்வு செய்தனர்.
    • கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விபத்து நடந்ததாக சிலர் வதந்திகளை பரப்பினர்.

    சங்கராபுரம்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள வாணாபுரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த சத்தம் கேட்டது.

    இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பலர் அச்சமடைந்தனர். இந்நிலையில் சத்தம் கேட்பதற்கு முன்பு அப்பகுதியில் இரண்டு ராணுவ விமானங்கள் பறந்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனால் விமானங்கள் வெடித்து சிதறி இருக்கலாம் என தகவல் காட்டு தீ போல் பரவியது. இதுபற்றி தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ், திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார், பகண்டை கூட்டுரோடு இன்ஸ்பெக்டர் பாலாஜி, வனத்துறை உயர் அதிகாரிகள், வருவாய்த் துறையினர், தீயணைப்பு துறை மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆகியோர் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் மையனூர், லா.கூடலூர், மாடாம்பூண்டி கூட்டு ரோடு வனப்பகுதி மற்றும் அதைச் சுற்றி உள்ள கிராமங்களில் டிரோன் கேமரா மூலம் ஆய்வு செய்தனர்.

    ஆனால் எந்தவித தடயமும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் இரவு 8 மணி அளவில் சின்னசேலம், கள்ளக்குறிச்சி மற்றும் அதை சுற்றி உள்ள பகுதியில் இதேபோல் பலத்த சத்தம் கேட்டதாக தகவல்கள் வந்தது. இதனால் பொதுமக்கள் மிகுந்த அச்சமடைந்தனர்.

    இந்நிலையில், இது குறித்து இந்திய விமானப்படை விமான தளம் சூலூர் மற்றும் தஞ்சாவூர் பகுதிகளில் விசாரித்ததில், இது வழக்கமான விமானப்படை பயிற்சி நடைமுறை என்றும், நேற்று கள்ளக்குறிச்சி பகுதியில் பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டது என்றும், உறுதி செய்யப்பட்டது.

    எனவே பொதுமக்கள் யாரும் அச்சம் கொள்ள வேண்டாம் எனவும், வதந்திகள் ஏதும் பரப்ப வேண்டாம் எனவும் கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களுக்கு மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு ஊட்டியில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தின் புகைப்படம் மற்றும் வீடியோ காட்சிகளை தற்போது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விபத்து நடந்ததாக சிலர் வதந்திகளை பரப்பினர். எனவே இது குறித்து போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் கூறுகையில், வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம், வதந்திகள் பரப்புவோர் மீது சட்டபடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    • செல்வம் தினமும் குடித்து விட்டு மனைவியும் பிள்ளை களையும் அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.
    • செல்வம் தன் மனைவியை பார்ப்ப தற்காக விஜயபுரத்திற்கு வந்தார்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் விஜயபுரத்தை சேர்ந்த மலர் (வயது 50). இவருடைய மகள் ராசாத்தி (30) இவரது கணவர் செல்வம் (45) ஆடுகள் விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். செல்வத்துக்கு குடிப்பழக்கம் உள்ளது. இவர் தினமும் குடித்து விட்டு மனைவியும் பிள்ளை களையும் அடித்து துன்புறுத்தியதாக கூறப்படு கிறது. இதனால் மனம் உடைந்த ராசாத்தி சின்ன சேலம் விஜயபுரத்தில் உள்ள தனது தாயார் மலர் வீட்டில் தன் பிள்ளை களுடன் வசித்து வருகிறார்.

    இந்த நிலையில் செல்வம் தன் மனைவியை பார்ப்ப தற்காக விஜயபுரத்திற்கு வந்தார்.பின்னர் மனைவி ராசாத்தியிடம் நகைகளை கேட்டார். இதனால் இரு வருக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது கோபமடைந்த செல்வம் தனது மனைவி ராசாத்தி மற்றும் அவரது தாய் மலரையும் கட்டையால் தாக்கினார். இதில் மாமியார் மலரின் மண்டை உடைந்தது. இதுகுறித்து சின்னசேலம் போலீஸ் நிலையத்தில் ராசாத்தி புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து செல்வத்தை கைது செய்த னர்.

    • திருக்கோவிலூர் பகுதியில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாக வீடியோ உள்ளூர் வாட்ஸ் அப் குழுக்களில் பரவியது.
    • அமைதியை குலைக்கும் விதமாக பொய்யான செய்திகளை பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை.

    கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே உள்ள மையனூர், மெய்யூர் பகுதியில் இன்று பகல் 12 மணிக்கு பயங்கர வெடி சப்தம் கேட்டதாக கிராம மக்கள் புகார் தெரிவித்தனர்.

    இதைதொடர்ந்து, 4 மணி நேரமாக சுற்றுவட்டாரப் பகுதியில் போலீசார் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து, சம்பவ இடத்திற்கு மாவட்ட எஸ்.பி. மோகன்ராஜ் வருகை தந்து விசாரணை நடத்தினார். ட்ரோன் மூலமாகவும் போலீசார் தேடி வந்தனர்.

    மேலும், திருக்கோவிலூர் பகுதியில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாக வீடியோ உள்ளூர் வாட்ஸ் அப் குழுக்களில் பரவியது. அந்த வீடியோ 2021ம் ஆண்டு ஊட்டியில் நடந்தது என்றும் அமைதியை குலைக்கும் விதமாக பொய்யான செய்திகளை பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.

    • 2 பேர் ஒரு ஆட்டை திருடிக் கொண்டு மோட்டார் சைக்கிளில் சென்றனர்.
    • மர்மந பர்கள் ஆட்டை சாலையில் விட்டுவிட்டு தப்பிவிட்டனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் மண்மலை கிராமத்தில் நேற்று நள்ளிரவு 1 மணி அளவில் செல்லம்பட்டு கச்சிராயப்பாளையம் சாலையில் மர்ம நம்பர்கள் 2 பேர் ஒரு ஆட்டை திருடிக் கொண்டு மோட்டார் சைக்கிளில் சென்றனர். இதனைப் பார்த்த ஒரு சிலர் மோட்டார் சைக்கிளில் வந்தவர்களை நிறுத்தினர். நீங்கள் யார், இந்த ஆடு யாருடையாது என்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளிக்காத மர்மநபர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பித்தனர். அவர்களை பொதுமக்கள் விரட்டி சென்றனர். மோட்டார் சைக்கிளில் சென்ற மர்மந பர்கள் இதனை பார்த்து ஆட்டை சாலையில் விட்டுவிட்டு தப்பிவிட்டனர். மண்மலை கிராமத்தில் நள்ளிரவில் வரும் மர்மநபர்கள் மோட்டார் சைக்கிள் திருட்டு, கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு ேபான்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    • நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதம் அடைந்தது.
    • விவசாயிகள் ஆக்கிரமித்து ள்ளதாகவும் இதனால் மழை நீர் வெளியேறாமல் விவசாய நிலங்களில் தேங்கி நிற்பதால் நெற்பயிர்கள் சேதமடைந்தன

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் அருகே நாகலூர் கிராமத்தில் சுமார் 200-ஏக்கருக்கு மேற்பட்ட பரப்பளவில் நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதம் அடைந்தது. இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட ஊராட்சி குழு சேர்மன் புவனேஸ்வரி பெருமாள் தலைமையில் ஒன்றிய குழு சேர்மன் தாமோதரன், ஒன்றிய செயலாளர்கள் அண்ணாதுரை, நெடுஞ்செழியன் ஆகியோர் சேதமடைந்த நெற்பயிர்களை நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

    அப்போது பாதிக்கப்பட்ட விவசாயிகளிடம் பயிர் செய்யப்பட்டுள்ள பரப்பளவு, நெல் ரகம் மற்றும் சேத விபரம் குறித்து புவனேஸ்வரி பெருமாள் கேட்டறிந்தார். அப்போது ஏரியிலிருந்து நீர் வெளியேறும் வடிகால் வாய்க்காலை ஒரு சில விவசாயிகள் ஆக்கிரமித்து ள்ளதாகவும் இதனால் மழை நீர் வெளியேறாமல் விவசாய நிலங்களில் தேங்கி நிற்பதால் நெற்பயிர்கள் சேதமடைந்தன எனவும் விவசாயிகள் கூறினர்.

    சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று வடிகால் வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஊராட்சி குழு சேர்மன் விவசாயி களிடம் கூறினார். அப்போது மாவட்ட பிரதிநிதி மடம் பெருமாள் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் பலரும் உடன் இருந்தனர்.

    • தனது மோட்டார் சைக்கிளில் மலைக்கோட்டாலம் சென்றார்.
    • எதிரேவந்த டிராக்டர் இவர் மீது மோதியது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி அருகே ஆத்து மாமாந்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர் மகன் விஜயன் (வயது 27), இவர் நேற்று சொந்த வேலையாக தனது மோட்டார் சைக்கிளில் மலைக்கோட்டாலம் சென்றார். பின்னர் மலைக்கோட்ட லத்திலிருந்து தனது மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினார். அப்போது மலைக்கோட்டாலம் அருகே மோட்டார் சைக்கிள் வந்தபோது எதிரேவந்த டிராக்டர் இவர் மீது மோதியது.

    இதில் சம்பவ இடத்திலேயே விஜயன் இறந்தார். இது குறித்து தகவல் அறிந்த வரஞ்சரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விஜயன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    ×