search icon
என் மலர்tooltip icon

    கள்ளக்குறிச்சி

    • கலியன் வழக்கம் போல கூலி வேலைக்கு சென்று நேற்று வீடு திரும்பினார்.
    • கொக்கு பிடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்து விட்டு மயங்கி விழுந்தார்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் அருகே பாதூரை சேர்ந்தவர் கலியன் (வயது 62). விவசாய க் கூலி. இவர் வழக்கம் போல கூலி வேலைக்கு சென்று நேற்று வீடு திரும்பினார். அப்போது குடித்து விட்டு வந்தார். இதனை அவரது மனைவி மற்றும் மகன்கள் கண்டித்தனர். இதனால் ஆத்திரமடைந்த கலியன், கொக்கு பிடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்து விட்டு மயங்கி விழுந்தார். அவரை உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பலனின்றி நேற்று இரவு இறந்து போனார். இது தொடர்பாக திருநாவலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமதாஸ் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கள்ளக்குறிச்சி அருகே சாராயம் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • போலீசார் தொண்டனந்தல் கிராம பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    கள்ளக்குறிச்சி :

    கள்ளக்குறிச்சி மாவட்டம் பகண்டை கூட்டுரோடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் சூர்யா, சோலை, ஜெய ராமன் தலைமையிலான போலீசார் தொண்டனந்தல் கிராம பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு அதே பகுதியை சேர்ந்த அடைக்கலராஜ் (வயது 35) என்பவர் சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தார். இதையடுத்து போலீ சார் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர். இதில் அடைக்கலராஜிக்கு திருவண்ணாமலை மாவட்டம் பெருங்குளத்தூர் பகுதியை சேர்ந்த அரவிந்த் (25) என்பவர் சாராயத்தை கடத்தி வந்து விற்பனைக்கு கொடுத்து வந்தது தெரிந்தது.

    இதையடுத்து அடைக்கலராஜ் மூலம் அரவிந்தை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு விற்பனைக்கு சாராயம் கொண்டுவருமாறு போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து இருசக்கர வாகனத்தில் சாராயத்தை கடத்தி வந்த அரவிந்தை போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். இதையடுத்து அடைக்கலராஜ், அரவிந் ஆகியோரிடம் இருந்து 35 லிட்டர் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • வீட்டிற்கு வந்த மர்ம நபர், தன்னை உறவினராக தேவதர்ஷினியிடம் அறிமுகப்படுத்திக் கொண்டார்.
    • நான் யாரையும் அனுப்பவில்லை எனக் கூறிய, தேன்மொழி பீரோவை திறந்து பார்த்தார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே மாடூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 40). இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி தேன்மொழி (35), மகள் தேவதர்ஷினி (11) ஆகியோர் வீட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அதே பகுதியில் நடந்த 100 நாள் வேலைக்கு தேன்மொழி சென்றார். அப்போது அவரது மகள் தேவதர்ஷினி வீட்டில் படித்துக் கொண்டிருந்தார். அப்பொழுது வீட்டிற்கு வந்த மர்ம நபர், தன்னை உறவினராக தேவதர்ஷினியிடம் அறிமுகப்படுத்திக் கொண்டார். மேலும், தானும் 100 நாள் வேலை செய்வதாகவும் கூறினார்.

    உங்கள் வீட்டின் பீரோவில் ஒரு சீட்டு உள்ளது. அதனை உன்னுடைய அம்மா எடுத்துவரச் சொல்லி என்னை அனுப்பினார் என மர்மநபர் தேவதர்ஷினியிடம் கூறினார். இதனை நம்பிய குழந்தை தேவதர்ஷினி மர்மநபரிடம் பீரோ சாவியை கொடுத்தார். சிறிது நேரம் கழித்து சீட்டை எடுத்துக்கொண்டேன் எனக் கூறி பீரோ சாவிலை தேவதர்ஷினியிடம் கொடுத்துவிட்டு சென்றார். 100 நாள் வேலை முடித்து வீட்டிற்கு வந்த தேன்மொழியிடம், தேவதர்ஷினி நடந்தவற்றை கூறினார். நான் யாரையும் அனுப்பவில்லை எனக் கூறிய, தேன்மொழி பீரோவை திறந்து பார்த்தார். அதிலிருந்த 6 பவுன் தங்க நகை காணாமல் போயிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    மகள் கூறிய அங்க அடையாளங்களை வைத்து நகையை திருடிச் சென்ற மர்மநபரை தேன்மொழி ஊர் முழுவதும் தேடினார். அவர் எங்கும் கிடைக்கவில்லை. இது குறித்த புகாரின் பேரில் தியாக துருகம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது. மேலும், நகையை கொள்ளையடித்த மர்ம நபர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து, அவரை தேடி வருகின்றனர். பட்டம் பகலில் வீட்டிலிருந்த 11 வயது பெண் குழந்தையை ஏமாற்றிய மர்மநபர், நூதன முறையில் நகையை அபேஸ் செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

    • கடந்த ஜூலை 24-ந் தேதி தொடங்க ப்பட்டு 2 கட்டங்களாக நடைபெற்று வருகிறது.
    • மாவட்ட கலெக்டர் அலுவலக கட்டுப்பாட்டு அறையில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் வெளியிட்டுள்ள செய்திக்கு றிப்பில் கூறியிருப்பதாவது:- கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தி ற்கான விண்ணப்ப ப்பதிவு முகாம்கள் கடந்த ஜூலை 24-ந் தேதி தொடங்க ப்பட்டு 2 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மொத்தமுள்ள 766 ரேஷன் கடைகளில் 4,34,663 ரேஷன் கார்டுகள் உள்ளன. இதில், முதற்கட்ட மாக 580 ரேஷன் கடைகளுக்கு உட்பட்ட 2,75,356 ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஜூலை 24 முதல் ஆகஸ்டு 4 வரை நடைபெற்ற முகாம்களில் 80 சதவீத விண்ணப்பங்கள் பெறப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    மேலும், 2-ம் கட்டமாக கள்ளக்குறிச்சி வட்டத்தில் 41 ரேஷன் கடைகளுக்கு உட்பட்ட 36,166 ரேஷன் கார்டுதாரர்களின் விண்ணப்பங்களும், சின்னசேலம் வட்டத்தில் 39 ரேஷன் கடைகளுக்கு உட்பட்ட 31,478 ரேஷன் கார்டுதாரர்களின் விண்ணப்பங்களும், சங்கராபுரம் வட்டத்தில் 52 ரேஷன் கடைகளுக்கு உட்பட்ட 46,690 ரேஷன் கார்டுதாரர்களின் விண்ண ப்பங்களும், கல்வராயன்மலை வட்டத்தில் 11 நியாய விலை கடைகளுக்கு உட்பட்ட 6,901 ரேஷன் கார்டுதாரர்களின் விண்ண ப்பங்களும், உளுந்தூ ர்பேட்டை வட்டத்தில் 18 ரேஷன் கடைகளுக்கு உட்பட்ட 16,787 ரேஷன் கார்டுதாரர்களின் விண்ணப்பங்களும், திருக்கோவிலூர் வட்டத்தில் 25 ரேஷன் கடைகளுக்கு உட்பட்ட 21,285 ரேஷன் கார்டுதா ரர்களின் விண்ணப்பங்களும் ஆக மொத்தம் 186 ரேஷன் கடைகளுக்கு உட்பட்ட 1,59,307 ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஆகஸ்டு 5-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை விண்ணப்பங்கள் பெறும் முகாம்கள் நடைபெற்று வருகிறது.

    இந்த திட்டம் தொடர்பான விவரங்கள், புகார்கள் இருந்தால் மாவட்ட கலெக்டர் அலுவலக கட்டுப்பாட்டு அறையில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். இது தவிர, அனைத்து தாசில்தார் அலுவலக ங்களிலும் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்ப ட்டுள்ளன. எனவே அந்தந்த பகுதி பொதுமக்கள் அவர்களது தாசில்தார் அலுவலக கட்டுப்பாட்டு அறைகளை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ரிஷிவந்தியம் அருகே அரசு பஸ் மோதி வாலிபர் பலியானார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    ரிஷிவந்தியத்தை அடுத்த லாலாபேட்டையை சேர்ந்த வர் சுந்தரபாண்டியன் (வயது 25) விவசாயி. இவர் தனது இருசக்கர வாகனத்தில் கீழத்தேனூரில் இருந்து வீட்டிற்கு புறப்பட்டார். கீழத்தேனூர் பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது, எதிரே வந்த அரசு பஸ் சுந்தரபாண்டியன் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

    பின்னர் மேல்சிகிச் சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே சுந்தர பாண்டியன் பரிதாப மாக உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் விபத்து ஏற்படுத்திய பஸ் டிரைவர் அய்யனார் பாளை யத்தை சேர்ந்த சக்திவேல் மீது ரிஷிவந்தியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • மின்விசிறியில் கனவள்ளி தூக்குபோட்டு இறந்த நிலையில் தொங்கினார்.
    • விசாரணை நடத்த கோட்டாட்சியருக்கு பரிந்துரை செய்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள சிறுபாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் கலியமூர்த்தி மகள் கனகவள்ளி (வயது 20). நர்சிங் முடித்துள்ளார். இவருக்கும் பக்கத்து கிராமமான பாட்சா பாளையத்தை சேர்ந்த விவசாயத் தொழிலாளி சுகனேஷ் (25) என்பவருக்கும் 3 மாதங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்றது. ஆடி மாதத்தை முன்னிட்டு கனக வள்ளியின் பெற்றோர், சுகனேஷ் வீட்டிற்கு சென்றனர். அங்கு சீர் வரிசை வைத்து, கனகவள்ளியை வீட்டிற்கு அழைத்து வந்தனர். வீட்டிற்கு வந்த கனகவள்ளி சோகமாகவே இருந்துள்ளார். புதியதாக திருமணமாகி கணவனை பிரிந்ததால் சோகமாக இருப்பதாக பெற்றோர் கருதினர். 

    இந்நிலையில் வீட்டில் படுத்துறங்கிய கனகவள்ளி இன்று காலை நீண்ட நேரமாகியும் வெளியில் வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் வீட்டிலிருந்த அறைக்குள் சென்று பார்த்தனர். அங்கிருந்த மின்விசிறியில் கனவள்ளி தூக்குபோட்டு இறந்த நிலையில் தொங்கினார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் கதறியழுத காட்சி அக்கம் பக்கம் இருந்தவர்களிடையே நெகி ழ்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த உளுந்தூர்பேட்டை போலீ சார், கனகவள்ளியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

    மேலும், கனவள்ளி தற்கொலை செய்து கொண்ட காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி 3 மாதத்தில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதால், இது தொடர்பாக விசாரணை நடத்த கோட்டாட்சியருக்கு பரிந்துரை செய்தனர். அதன்படி திருக்கோவிலூர் கோட்டாட்சியர் சிறுபாக்கம், பாட்சா பாளையம் கிராமத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சி யையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

    • இன்று அதிகாலை வாக்குவாதம் ஏற்பட்டது.
    • ஒருவரை ஒருவர் தடி மற்றும் இரும்பு கம்பியால் தாக்கி கொண்டனர்.

    கள்ளக்குறிச்சி:

    திருநாவலூர் அருகே கிளியூர் கிராமத்தை சேர்ந்தவர் லோகநாதன் (வயது 45). இவரது வீட்டருகே வசித்து வருபவர் ஆறுமுகம் (50). இருவருக்கும் இடையே சிறிய சந்து தொடர்பாக இடப்பிரச்சினை இருந்து வருகிறது. இந்நிலையில் லோக நாதன் தரப்பினருக்கும், ஆறுமுகம் தரப்பினரு க்குமிடையே இன்று அதிகாலை வாக்குவாதம் ஏற்பட்டது. இது தகராறாக மாறி, ஒருவரை ஒருவர் தடி மற்றும் இரும்பு கம்பியால் தாக்கி கொண்டனர். இதில் லோகநாதனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ஆறுமுகத்திற்கு கை மற்றும் கழுத்து பகுதியில் காயம் ஏற்பட்டது.

    அங்கிருந்தவர்கள் 2 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இது தொடர்பான புகாரின் பேரில் திருநாவலூர் இன்ஸ்பெக்டர் அசோகன் மற்றும் போலீசார் கிளியூர் கிராமத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இது தொடர்பாக வேறெதும் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க திருநாவலூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப ட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • ஆற்றங்கரையில் நடுமடுவு என்ற இடத்தில் அழுகிய நிலையில் 35 வயதுடைய பெண் பிணம் கரை ஒதுங்கியது.
    • கரை ஒதுங்கிய அடையாளம் தெரியாத பெண்ணின் உடலில் ஆங்காங்கே காயங்கள் இருந்தது.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை பகுதியில் தேவனூர் உள்ளது. இங்குள்ள கல்பொடை ஆற்றங்கரையில் நடுமடுவு என்ற இடத்தில் அழுகிய நிலையில் 35 வயதுடைய பெண் பிணம் கரை ஒதுங்கியது. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் கரியாலூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் மர்மமான முறையில் கரை ஒதுங்கிய பெண்ணின் உடலை கைப்பற்றினர். பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.கரை ஒதுங்கிய அடையாளம் தெரியாத பெண்ணின் உடலில் ஆங்காங்கே காயங்கள் இருந்தது. இதனால் இந்த பெண்ணை கற்பழித்து கொலை செய்து ஆற்றில் வீசியிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை உருவாக்கியுள்ளது.

    • கிராமத்தில் உள்ள ஏரி அருகே 2 குடிநீர் கிணறுகள் உள்ளன.
    • கடந்த 10 நாட்களுக்கு மேலாக குடிநீர் சரிவர வழங்கவில்லை.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள உலகியநல்லூர் கிராமத்தில் 700-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் உள்ள ஏரி அருகே 2 குடிநீர் கிணறுகள் உள்ளன. இதில் ஒரு கிணற்றில் ஊற்று தண்ணீர் இல்லை. மற்றொரு கிணற்றில் உள்ள குடிநீர் மூலம் மட்டுமே ஊர் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் குடிநீர் பற்றாகுறை ஏற்பட்டு வந்தது.

    இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக குடிநீர் சரிவர வழங்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் இன்று ஈடுபட்டனர். தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு போலீசார் மற்றும் ஊராட்சி நிர்வாகத்தினர் வந்தனர். மறியலில் ஈடுபட்ட பொது மக்களிடையே பேச்சுவார்த்தை நடத்தி குடிநீர் தினமும் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்து தருகிறோம் என உறுதி அளித்தனர். அதன் பேரில் கிராம மக்கள் சாலை மறியலை கைவிட்டனர். இந்த சாலை மறியலால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • மதியழகிக்கு சொந்தமான சிமெண்டு குழாயை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றினர்.
    • மதியழகி கொடுத்த புகாரின் பேரில் பரமசிவம் உள்பட 3 பேர் மீதும் பகண்டை கூட்டுரோடு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம் தாலுகா பெரியக்கொள்ளியூர் கிராமத்தை சேர்ந்தவர் சம்பத் மனைவி மதியழகி (வயது 45). இவரது நிலத்துக்கு அருகே அதே கிராமத்தை சேர்ந்த அங்கமுத்து மகன்கள் பரமசிவம், ஆறுமுகம், செந்தில் ஆகியோருக்கு சொந்தமான விளைநிலம் உள்ளது. சம்பவத்தன்று பரமசிவம் மற்றும் இவரது சகோதரர்கள் சேர்ந்து பொதுப்பாதையில் இருந்த மதியழகிக்கு சொந்தமான சிமெண்டு குழாயை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றினர்.

    இதை தட்டிக்கேட்ட மதியழகி, அவரது கணவர் சம்பத் ஆகியோரை பரமசிவம் மற்றும் அவரது சகோதரர்கள் திட்டி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து மதியழகி கொடுத்த புகாரின் பேரில் பரமசிவம் உள்பட 3 பேர் மீதும் பகண்டை கூட்டுரோடு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை வழங்க விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.
    • ஏற்கனவே பயன்பெ ற்றவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கத் தகுதியற்ற வர்களா வார்கள்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் தொடங்கும் காலாண்டிற்கு, படித்த வேலைவாய்ப்பற்றஇளைஞர்களிடமிருந்து வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ்பயன்பெறுவதற்கான விண்ணப்பங்கள் தற்பொ ழுது பெறப்படுகின்றன. 10-ம் வகுப்பு தோல்வி,  தேர்ச்சி மற்றும் அதற்கு மேலான கல்வித்தகுதிகளை பெற்றவர்கள் வேலை வாய்ப்பு அலுவகத்தில் பதிவு செய்து பதிவினை த்தொடர்ந்து புதுப்பித்து 30.9.2023 அன்றைய நிலையில் 5 ஆண்டுகள் நிறைவடைந்தபின்னர் வேலைவாய்ப்பின்றி காத்தி ருக்கும் இளைஞர்க ளுக்கு தமிழக அரசால் உதவித்தொகை வழங்கப்ப டுகிறது.

    இத்திட்டத்தின்கீழ் பயன்பெற மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக் க்கு மிகாமல் இருத்தல் வேண்டும். மேலும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மனுதாரர்கள் 30.9.2023 அன்றைய நிலையில் 45 வயதிற்குள்ளும், இதர இனத்தை சார்ந்தவர்கள் 40வயதிற்குள்ளும் இருத்தல் வேண்டும். மாதம் ஒன்றுக்கு 10-ம் வகுப்பு தோல்விக்கு ரூ.200-ம் ,10-ம் வகுப்பு தேர்ச்சிக்கு ரூ.300-ம், மேல்நிலைக்கல்வி தேர்ச்சிக்கு ரூ.400-ம் பட்டப்படிப்பு தேர்ச்சிக்கு ரூ.600-ம் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 10-ம் வகுப்பு தோல்வி மற்றும் தேர்ச்சிக்கு ரூ.600-ம் மற்றும் மேல்நிலைகல்வி தேர்ச்சிக்கு ரூ.750-ம் மற்றும் பட்டப்படிப்பு தேர்ச்சிக்கு ரூ.1000- ம் வழங்க தமிழக அரசு ஆணையிடப்பட்டுள்ளது. மேலும், உதவித்தொகை விண்ணப்பப்படிவம் பெ றவிரும்பும் மனுதாரர்கள், தங்களின்வேலைவாய்ப்பு அடையாள அட்டையினை ஆதாரமாக காண்பித்து, கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் வி ண்ணப்பங்களை அனைத்து அலுவலக வேலை நாட்க ளிலும், இலவசமாக பெற்று க்கொள்ளலாம்.

    மேலும் இத்திட்டத்தின் கீழ் ஏற்கனவே பயன்பெ ற்றவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கத் தகுதியற்ற வர்களா வார்கள். இத்திட்டத்தின்கீழ் பயன்பெ றுபவர்களின் பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. தொடங்கு ம் காலா ண்டிற்கான உதவித்தொகை விண்ண ப்பங்களை மனுதாரர்கள் 31.8.2023 தேதி வரை அனைத்து அலுவலக வேலைநாட்களிலும், கள்ளக்குறிச்சி நேப்பால் தெருவில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் அனைத்து அசல் கல்வி சான்றிதழ்கள், வேலை வாய்ப்பு அடையாள அட்டை மற்றும் தேசியம யமாக்கப்பட்ட வங்கிக் கணக்குப் புத்தகத்துடன் நேரில் சமர்ப்பிக்கலாம். இத் தகவலை கள்ள க்குறிச்சி மாவட்ட கலெக்டர்ஷ்ரவன் குமார் தெரிவித்துள்ளார்.

    • ரங்கப்பனூர் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே உள்ள கிராம சேவை மையத்தில் நடைபெற்றது.
    • முகாமில் 5 தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டனர்.

    கள்ளக்குறிச்சி:

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க தீனதயாள் உபாத்யாய கிராமின் கவுசல்ய யோஜனா திட்டத்தின் கீழ் 2023-2024-ம் ஆண்டு இலக்கு அடையும் பொருட்டு இளைஞர்களுக்கு திறன் பயிற்சி வேலைவாய்ப்பு தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்திட சிறப்பு முகாம் ரங்கப்பனூர் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே உள்ள கிராம சேவை மையத்தில் நடைபெற்றது.

    இதற்கு ஊராட்சி மன்ற தலைவர் அர்ச்சனா காமராஜன் தலைமை தாங்கினார். உதவி திட்ட அலுவலர் ராஜா முகாமை தொடங்கி வைத்தார். முகாமிற்கு 18 வயதிலிருந்து 35 வயது வரை ஊராட்சியிலிருந்து தகுதியுள்ள இளைஞர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். முகாமில் 5 தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டனர். முகாமில் துணை தலைவர் ராதிகா பாஸ்கரன், மகளிர் திட்ட வட்டார ஒருங்கிணைப்பாளர் தனலட்சுமி, ஊராட்சி செயலர் திருமால்வளவன் வார்டு உறுப்பினர்கள், பணித்தள பொறுப்பாளர்கள், மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ×