search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமரியில் நடந்த சிறப்பு முகாமில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 25,715 பேர் விண்ணப்பம்
    X

    கோப்பு படம் 

    குமரியில் நடந்த சிறப்பு முகாமில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 25,715 பேர் விண்ணப்பம்

    • வரைவு வாக்காளர் பட்டி யல் கடந்த 9-ந்தேதி வெளியிடப்பட்டது.
    • வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம் கடந்த 12, 13-ந்தேதிகளிலும் 26, 27-ந்தேதிகளிலும் வாக்குச்சாவடிகளில் நடந்தது.

    நாகர்கோவில்:

    தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியல் தொடர் திருத்தம் 2022 முடிவடைந்த நிலையில் வரைவு வாக்காளர் பட்டி யல் கடந்த 9-ந்தேதி வெளி யிடப்பட்டது.

    குமரி மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டி யலில் 7,73,553 ஆண் வாக் காளர்களும், 7,77,037 பெண் வாக்காளர்களும் 186 இதர வாக்காளர்கள் என மொத்தம் 15 லட்சத்து 50 ஆயிரத்து 776 வாக்காளர்கள் இடம் பெற்றிருந்தனர். இதைத்தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம் கடந்த 12, 13-ந்தேதிகளிலும் 26, 27-ந்தேதிகளிலும் வாக்குச்சாவடிகளில் நடந்தது.

    மாவட்டம் முழுவதும் 1695 வாக்குச்சாவடிகளில் இந்த முகாம் நடந்தது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்காக இளம் வாக்காளர்கள் ஆர்வமாக வந்து விண்ணப்பித்தனர்.வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கன்னியா குமரி தொகுதியில் அதிக பட்சமாக 5,833 பேர் விண் ணப்பித்துள்ளனர்.

    நாகர்கோவில் தொகுதி யில் 4142 பேரும் குளச்சல் தொகுதியில் 3810 பேரும் பத்மநாபபுரம் தொகுதியில் 3421 பேரும் விளவங்கோடு தொகுதியில் 3867 பேரும் கிள்ளியூர் தொகுதியில் 4642 பேர் என மொத்தம் 25,715 பேர் புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பித்துள்ளனர்.

    வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் செய்ய 4456 பேர் விண்ணப்பித்துள்ளனர்.பெயர் திருத்தம், முகவரி திருத்தத்திற்கு 5026 பேரும், ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் சேர்க்க 2917 பேரும் விண்ணப்பம் செய்துள்ளனர். கடந்த 9-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை கன்னியாகுமரி தொகுதியில் மொத்தம் 8945 விண்ணப்பங்களும், நாகர்கோவிலில் 6775, குளச்சலில் 6501, பத்ம நாபபுரத்தில் 5538, விளவங் கோட்டில் 4861, கிள்ளியூரில் 5,494 என மொத்தம் 38,114 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது.

    Next Story
    ×