search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    ரப்பர் தோட்ட தொழிலாளி பலி
    X

    கோப்பு படம் 

    ரப்பர் தோட்ட தொழிலாளி பலி

    • பரளியாறு கோட்ட மேலாளர்- ஊழியர் மீது வழக்கு
    • எந்திரம் மூலம் ரப்பர் மரத்தை சுற்றியுள்ள பூக்களை வெட்டிக் கொண்டிருந்தபோது எந்திரம் தவறுதலாக ராஜ்குமார் நெஞ்சில் தாக்கியதில் ராஜ்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    நாகர்கோவில்:

    பூதப்பாண்டி அருகே தடிக்காரன் கோணம் பத்மநாப நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 43). இவரது மனைவி மீனா குமாரி. இவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். ராஜ்குமார் கீரிப்பாறை அரசு ரப்பர் கழக கோட்டத்திற்கு உட்பட்ட பரளியாறு பிரிவில் களப்பணியாளராக வேலை பார்த்து வந்தார். நேற்று காலையில் இவர் பரளியாறு ரப்பர் தோட்டம் பகுதியில் எந்திரம் மூலம் ரப்பர் மரத்தை சுற்றியுள்ள பூக்களை வெட்டிக் கொண்டிருந்தார்.

    அப்போது எந்திரம் தவறுதலாக ராஜ்குமார்நெஞ்சில் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் ராஜ்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.இதையடுத்து சக தொழிலாளர்கள் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். கீரிப்பாறை போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிணமாக கிடந்த ராஜ்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து கீரிப்பாறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர். பரளியாறு கோட்ட மேலாளர் பிரபாகரன், வடமாநில ஊழியர் சந்திப் (25) ஆகிய 2 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    Next Story
    ×