என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
நாகர்கோவிலில் டியூசனுக்கு சென்ற மாணவி மாயம்
Byமாலை மலர்4 Dec 2022 8:18 AM GMT
- வடசேரி காவல் நிலையத்தில் மாணவியின் தந்தை புகார்
- போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்
நாகர்கோவில்:
நாகர்கோவில் காமராஜர்புரத்தை சேர்ந்த 14 வயது மாணவி ஒருவர், நாகர்கோவிலில் உள்ள மகளிர் பள்ளி ஒன்றில் 8ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று மாணவி, அந்த பகுதியில் டியூசன் படிக்க சென்றார். ஆனால் அவர் வீடு திரும்பி வர வில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர், டியூசனுக்கு சென்று கேட்ட போது மாணவி டியூசனுக்கு வர வில்லை என்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்து மாணவியின் தோழிகள், உறவினர்கள் வீடுகளில் விசாரித்தனர். ஆனால் மாணவி பற்றி எந்த தகவலும் இல்லை. இதையடுத்து வடசேரி காவல் நிலையத்தில் மாணவியின் தந்தை புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மாணவி, கடத்தப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. இது தொடர்பாக பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X