என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கன்னியாகுமரியில் புதிய படகு தளம் அமைக்கப்படும்
- பல்வேறு துறை அலுவலர்களுடன் மனோதங்கராஜ் ஆலோசனை
- விவேகானந்தர் மண்டபத்திற்கும், திருவள்ளுவர் சிலைக்கும் இணைப்பு பாலம்
நாகர்கோவில்:
கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகையில் அமைச்சர்மனோ தங்கராஜ் சுற்றுலா மேம்பாடு குறித்து மாவட்ட சுற்றுலாத்துறை, இந்து சமய அறநிலையத்துறை, தோட்டக்கலைத்துறை உட்பட பல்வேறு துறை அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
தொடர்ந்து திரிவேணி சங்கம கடற்கரை பகுதி, காந்தி நினைவு மண்டபம் , காமராஜர் மணிமண்டபம் ஆகிய பகுதிகளில் உள்ள பூங்கா , கடற்கரை சாலையில் உள்ள காட்சி கோபுர பகுதி மற்றும் கடற்கரை பகுதிகள், சன்செட் பாயிண்ட் பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் அவர் நிருபர் களிடம் கூறியதாவது:-
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கி ணங்க கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளுக்கு அடிப்படை வசதிகள் உட்பட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது. விவேகானந்தர் மண்டபத்திற்கும், திருவள்ளுவர் சிலைக்கும் இணைப்பு பாலம் , பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்தின் வாயிலாக புதிய படகுதளம் வெகுவிரைவில் அமைக்கப்படவுள்ளது. மேலும் சுற்றுலா பயணி களை கவரும் வண்ணமாக கன்னியாகுமரியின் அழகை மேம்படுத்துவது, கடற்கரை பகுதியில் மரங்கள் நடு வது குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சர்வதேச அளவில் சுற்றுலா பயணி களை ஈர்க்கும் வகை யில் கடற்கரை பகுதியினை நவீனபடுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொ ள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் தேசிய நெடுஞ்சாலை (நிலமெடுப்பு) ரேவதி, நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் சேதுராம லிங்கம், கன்னி யாகுமரி பேரூராட்சி தலைவர்குமரி ஸ்டீபன், மாவட்ட சுற்றுலா நல அலுவலர் சீதாராமன், மாவட்ட திருக்கோயில் இணை ஆணையர்ஞானசேகர், உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்