என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர் தம்பதியின் காருக்குள் புகுந்த பாம்பு
- வழக்கம் போல் காரில் பணிக்கு வந்தனர்
- காருக்குள் இருந்து சீறிப்பாய்ந்து வெளியேறியது
நாகர்கோவில்:
ஆசாரிப ள்ளம் அரசு மருத்துவ க்கல்லூரி ஆஸ்பத்திரியில் கணவன்- மனைவி 2 பேர் டாக்டராக வேலை பார்த்து வருகிறார்கள். இவர்கள் இன்று காலை வழக்கம் போல் காரில் பணிக்கு வந்தனர். வேலை முடிந்து மதியம் வீட்டிற்கு செல்வதற்காக தயாரானார்கள்.
அப்போது காரின் டிக்கியை திறந்த போது பாம்பு ஒன்று காருக்குள்ஓடியதை பார்த்து கணவன்- மனைவி இருவரும் அங்கி ருந்து ஓட்டம் பிடித்தனர். பின்னர் அதுபற்றி நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்திற்கும், வனத்து றைக்கும் தகவல் தெரிவி க்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு வீரர்களும், வனத்துறையினரும்ஆசாரி ப்பள்ளம் ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்தனர். பின்னர் சம்பந்தப்பட்ட டாக்டரின் காரை வனத்துறை ஊழியர் ஒருவர் மருத்துவமனை வளாகத்தை விட்டு வெளியே ஓட்டி சென்றார். பின்னர் காரை வெளியே நிறுத்திவிட்டு தண்ணீரை காருக்குள் பீய்ச்சியடித்த போது பாம்பு ஒன்று காருக்குள் இருந்து சீறிப்பா ய்ந்து வெளி யேறியது. இதையடுத்த அந்த பாம்பை வனத்துறையினர் பிடித்தனர். பின்பு அதனை வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். டாக்டர் தம்பதியினர் காருக்குள் பாம்பு புகுந்த சம்பவம் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்