search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர்கோவிலில் 15-ந் தேதி அண்ணா பிறந்தநாள் சைக்கிள் போட்டி - ரூ.70,500 பரிசாக வழங்கப்படுகிறது
    X

    நாகர்கோவிலில் 15-ந் தேதி அண்ணா பிறந்தநாள் சைக்கிள் போட்டி - ரூ.70,500 பரிசாக வழங்கப்படுகிறது

    • 13 வயதிற்குள் உள்ள மாணவர்களுக்கு 15 கி.மீ. தூரமும், மாணவிகளுக்கு 10 கி.மீ தூரமும் போட்டி நடக்கிறது
    • போட்டிகளில் பங்கேற்க இந்தியாவில் தயாரான மிதிவண்டிகள் மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கப்படுவர்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது : -

    முன்னாள் தமிழ்நாடு முதல்-அமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை சிறப்பிக்கும் வண்ணம் ஆண்டு மோறும் செப்டம்பர் மாதம் தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் மாவட்ட அளவிலான விரைவு சைக்கிள் போட்டிகள் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு நடத்தப்பட்டு வருகிறது. அதே போல் இவ்வாண்டும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பாக செப்டம்பர் 15-ந்தேதி அன்று காலை 8 மணிக்கு நாகர்கோவில் - காவல்கிணறு நான்கு வழிப்பாதையில் நடைபெறவுள்ளது.

    13 வயதிற்குள் உள்ள மாணவர்களுக்கு 15 கி.மீ. தூரமும், மாணவிகளுக்கு 10 கி.மீ தூரமும் போட்டி நடக்கிறது. இதுபோல் 15 வயதிற்குள் மாணவர்களுக்கு 20 கி.மீ. தூரமும், மாணவிகளுக்கு 15 கி.மீ. தூரமும் 17 வயதிற்குள் மாணவர்களுக்கு 20 கி.மீ. தூரமும், மாணவிகளுக்கு 15 கி.மீ. தூரம் என்ற அளவில் போட்டிகள் நடக்கிறது.

    பரிசுத் தொகை ஆறு பிரிவுகளுக்கும் முதல் பரிசு ரூ. 5000, இரண்டாம் பரிசு ரூ. 3000, மூன்றாம் பரிசு ரூ. 2000, 4 முதல் 10 இடங்களில் வருபவர்களுக்கான பரிசு ரூ. 250 வீதம் 13 பேருக்கு வழங்கப்படுகிறது. மொத்த பரிசு தொகை ரூ. 70 ஆயிரத்து 500 ஆகும். ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்வழங்கப்படும். போட்டிகளின் போது தக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. எதிர்பாராமல் ஏற்படும் போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவ- மாணவிகள் தங்களது பள்ளி தலைமை ஆசிரியரிடமிருந்து (Bonafide Certificate) வயதுச் சான்றிதழ் கண்டிப்பாக பெற்று வருதல் வேண்டும். சொந்த மிதிவண்டி (சைக்கிள்) கொண்டு வருதல் வேண்டும். இப்போட்டிகளில் பங்கேற்க இந்தியாவில் தயாரான மிதிவண்டிகள் மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கப்படுவர்.

    போட்டிகளில் வெற்றி பெறும் வீரர்-வீராங்கனைகளுக்கு பரிசுத் தொகையினை காசோலையாகவோ அல்லது வங்கி மாற்று வழி மூலமோ மட்டுமே வழங்கப்படும். எனவே போட்டியில் கலந்து கொள்ள விருப்பமுள்ள மாணவ-மாணவிகள் மேற்கண்ட விதிகளை பின்பற்றி செப்டம்பர் 15-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 7.30 மணிக்கு நாகர்கோவில் - காவல்கிணறு நான்கு வழிப்பாதை தொடக்க இடத்திற்கு வருகை தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×