என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
மணவாளக்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிள் மோதி 2 பேர் படுகாயம்
Byமாலை மலர்13 Jun 2022 7:35 AM GMT
- ஐ.டி.நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்பவர்
- பொதுமக்கள் 2 பேரையும் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்ப்பு
கன்னியாகுமரி :
நாகர்கோவில் அருகே சொத்தவிளை புத்தளத்தை சேர்ந்தவர் செல்வராஜ்.இவரது மகன் மணி செல்வன் (வயது 30).
இவர் சென்னையில் ஒரு ஐ.டி.நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இவர் மோட்டார் சைக்கிளில் மண்டைக்காடு சென்று விட்டு மீண்டும் வீட்டுக்கு புறப்பட்டார்.
மணவாளக்குறிச்சியை கடந்து சாத்தன்விளையில் செல்லும்போது, இவருக்கு முன்னால் மோட்டார் சைக்கிள் ஓட்டி சென்ற நெய்யூர் பெருங்கோடை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியது. இதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். உடனே அப்பகுதி பொதுமக்கள் 2 பேரையும் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இது குறித்து மணவாளக்குறிச்சி போலீசார் ராஜேந்திரன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X